பதிவு செய்த நாள்
04 டிச2011
23:40
புதுடில்லி: நாட்டின் உணவு தானிய உற்பத்தி, நடப்பு 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தின் (2007-2012), முதல் நான்கு நிதியாண்டுகளில், 2.90 சதவீதம் அதிகரித்துள்ளது என, மத்திய வேளாண் இணை அமைச்சர் ஹரிஷ் ராவத் தெரிவித்தார்.நடப்பு, 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தின், முதல் நான்கு ஆண்டுகளில், நாட்டின் உணவு தானிய உற்பத்தி, 23.45 கோடி டன்னிலிருந்து, 24.16 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. இருப்பினும், கடந்த 2009-10ம் நிதியாண்டில், நாட்டில் பல மாநிலங்களில் ஏற்பட்ட வறட்சியால், அவ்வாண்டில் உணவு தானிய உற்பத்தி, 21.81 கோடி டன்னாக குறைந்திருந்தது.குறிப்பாக, பீகார், ஜார்க்கண்ட், உத்தரபிரதேசத்தின் கிழக்கு பகுதி, மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில், வறட்சி காரணமாக அவ்வாண்டில், உணவு தானிய உற்பத்தி குறைந்து போயிருந்தது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|