பதிவு செய்த நாள்
04 டிச2011
23:43
- வீ.அரிகரசுதன் -
குறு, சிறு தொழில் நிறுவனங்களிடமிருந்து, 20 சதவீத பொருட்களை அரசு நிறுவனங்கள் கொள்முதல் செய்வதைக் கண்காணிக்க, வலிமையான அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என, தொழில் முனைவோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.நாட்டில், 2.60 கோடி குறு, சிறு நிறுவனங்கள் உள்ளன. இதன் மூலம், 6 கோடி பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இந்நிறுவனங்கள், பல்வேறு தொழில்துறைகளுக்கு தேவையான, 8,000க்கும் மேற்பட்ட பொருட்களை உற்பத்தி செய்கின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தியில், இந்நிறுவனங்களின் பங்களிப்பு, 8 சதவீதம் மற்றும் மொத்த ஏற்றுமதியில், 40 சதவீதம் என்றளவில் உள்ளது.
குண்டூசி கூடஇந்நிறுவனங்களை ஊக்குவிக்க மத்திய அரசு, சில ஆண்டுகளுக்கு முன்பு அரசுமற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் வாங்கும் குண்டூசி, போல்ட், நட்டு, மரச்சாமான்கள், கை பம்பு உள்ளிட்ட குறிப்பிட்ட, 350 பொருட்களை பட்டியலிட்டு, அவற்றை குறு, சிறு நிறுவனங்களிடமிருந்து தான் வாங்க வேண்டும் என்று அறிவித்தது. இந்த அறிவிப்பு காற்றோடு போனது. எந்த அரசுத் துறை நிறுவனங்களும் இதை முறையாக பின்பற்றவில்லை.
இந்நிலையில், மத்திய அரசுஅண்மையில் மீண்டும் ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதில் ரயில்வே, அஞ்Œலகம் போன்ற மத்திய அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள், 20 சதவீத பொருட்களை குறு, சிறு தொழில் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும். அதில், 4 சதவீதத்தை எஸ்.சி., எஸ்.டி., பிரிவைச் சேர்ந்த தொழில்முனைவோரிடமிருந்து பெற வேண்டும் என்று தெரிவித்திருந்தது.
அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள், தாமாகவே முன்வந்து இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும், மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, இது சட்டமாக்கப்படும் எனவும் அறிவித்தது.சந்தேகம்மத்திய அரசின் இந்த அறிவிப்பு, குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு நன்மை அளிப்பதாக இருந்தாலும், அரசு நிறுவனங்கள் இதை ஒழுங்காக பின்பற்றுமா என்பது சந்தேகமாகவே உள்ளது.ஏற்கென@வ, அறிவித்த திட்டம் செயல்படாமல் @பான நிலையில், புதிய திட்டத்தையாவது ஒழுங்காக அமல்படுத்த @வண்டும் என்று குறு,சிறு தொழில் முனை@வார் @வண்டு@காள் விடுத்துள்ளனர்.இத் திட்டத்தை கண்காணிக்க, பலம் பொருந்திய நிர்வாக அமைப்பை ஏற்படுத்தி, அதன் மூலம் பொதுத்துறை நிறுவனங்களின் கொள்முதலை கண்காணிக்க வேண்டும். இதன் மூலம் தான், அரசின் அறிவிப்பு குறு, சிறு நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கும்.
பெரிய நிறுவனங்கள் போட்டி
இதுகுறித்து, கோவை மாவட்ட குறு, சிறு தொழில்கள் சங்கத் தலைவர் கந்தசாமி கூறியதாவது:
வால்வு, வார்ப்படம், ஸ்டீல் கேஸ்டிங் போன்ற பொருட்களை பொதுத் துறையைச் சேர்ந்த பி.எச்.இ.எல்., பி.இ.எம்.எல், இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சப்ளை செய்து வருகிறோம். இந்நிறுவனங்கள், டெண்டர் விடும் போது, மொத்தஆர்டர்களையும் பெரிய நிறுவனங்கள் எடுத்து விடுகின்றன.குறைந்த அளவில் அதுவும், வெளியில் கிடைக்காத சில பொருட்களின் ஆர்டர்களை மட்டுமே, சிறு நிறுவனங்களுக்கு வழங்குகின்றன. மத்திய அரசின், 20 சதவீத கொள்முதல் அறிவிப்பு, வெளிப்படையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு கந்தசாமி கூறினார்.
காத்திருக்க வேண்டாம்:"டான்ஸ்டியா' அமைப்பின் முன்னாள் தலைவர் செல்வராஜ் கூறும்போது, "நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சிறு நிறுவனங்கள் முதுகெலும்பாக உள்ளன.மத்திய அரசின் கொள்முதல் கொள்கை முடிவு வரவேற்கத்தக்கது. அதேசமயம், மூன்று ஆண்டுகளில் சட்டம் இயற்றப்படும் வரை என்றில்லாமல், பொதுத்துறை நிறுவனங்கள் தற்போது முதலே, சிறு நிறுவனங்களின் தயாரிப்பு பொருட்களை 20 சதவீத அளவிற்கு, கொள்முதல் செய்ய வேண்டும்' என்றார்.மதுரை மாவட்ட குறு மற்றும் சிறு தொழில் சங்க தலைவர் மணிமாறன் கூறும்போது,"புதிய கொள்கையின் படி, குறு, சிறு நிறுவனங்களிடமிருந்து, 35 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை, பொதுத் துறை நிறுவனங்கள் கொள்முதல் செய்யவேண்டும்.
இதில், 7,000 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினரிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும்' என்றார்.
அமெரிக்காவை பின்பற்றி...
முதலாளித்துவ நாடான அமெரிக்காவில், சிறு தொழில் நிறுவனங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆண்டு@தாறும் அரசு துறைகள் @மற்கொள்ளும் மொத்த கொள்முதலில், 38 சதவீதம் சிறு தொழில் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்து கொள்கின்றன. இதற்காக, அங்கு சிறு வர்த்தக நிர்வாக சட்டம் (எஸ்.பி.ஏ.,) உள்ளது.இதை நிர்வகிக்கும் தலைவர், அமெரிக்க அதிபரால் நியமிக்கப்படுகிறார். கொள்முதல் செய்யாத அனைத்து துறை அதிகாரிகளையும் விசாரிக்கும் உரிமை அவருக்கு உண்டு. அமெரிக்காவை பின்பற்றி பல திட்டங்களை செயல்படுத்தும் மத்திய அரசு, இதையும் செயல்படுத்தினால், அது சிறு நிறுவனங்களுக்கு நன்மை அளிப்பதாக இருக்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|