ஸ்மார்ட்போன் வர்த்தகத்தை விரிவுபடுத்துகிறது பானோசோனிக்ஸ்மார்ட்போன் வர்த்தகத்தை விரிவுபடுத்துகிறது பானோசோனிக் ... எலெக்ட்ரானிக் வர்த்தகத்தில் (இ-காமர்ஸ்) சாதனை படைத்தது டைம்ஸ்டீல் எலெக்ட்ரானிக் வர்த்தகத்தில் (இ-காமர்ஸ்) சாதனை படைத்தது டைம்ஸ்டீல் ...
இந்திய சந்தையில் கால்பதி்க்கிறது ஏர்ஏசியா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 டிச
2011
10:00

கோலாலம்பூர் : ஆசியாவின் மிகப்பெரிய பட்ஜெட் விமான நிறுவனமான ஏர்ஏசியா ஏர்லைன்ஸ் நிறுவனம், இந்தியா மற்றும் சீன சந்தையில் புதிய யூனிட்களை துவங்க திட்டமிட்டுள்ளது. ஏர்ஏசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் துவங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 11ம் ஆண்டு துவக்கத்தில், பத்திரிகையாளர்களை சந்தித்த ஏர்ஏசியா ஏர்லைன்ஸ் நிறுவன தலைமை நிர்வாகி டோனி பெர்னான்டஸ் கூறியதாவது, இந்த செய்தி உண்மைதான் என்றும், இந்தியா மற்றும் சீன சந்தையில் விரைவில் புதிய யூனிட்களை தாங்கள் துவக்க திட்டமிட்டுள்ளோம். லாப நோக்கத்தோடு மற்றும் அதிவிரைவு விரிவாக்கத் திறனுடனான செயல்திட்டத்தை, அடுத்த 10 ஆண்டுகாலங்களில் செயல்படுத்த உள்ளோம். 10 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்து, 11ம் ஆண்டில் அடி எடுத்துவைத்துள்ள தங்கள் நிறுவனம், அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாராகி உள்ளோம். தற்போது இயங்கி வரும் இந்தோனேஷியா ஏர்ஏசியா மற்றும் தாய் ஏர்ஏசியா யூனிட்களின் வளர்ச்சி எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே இருந்தது. இதனை கருத்தில்கொண்டே, புதிய யூனிட்களை துவக்க திட்டமிட்டு‌ள்ளோம். இந்த ஆண்டில் துவங்கப்பட்ட பிலிப்பைன்ஸ் ஏர்ஏசியா மற்றும் ஜப்பான் ஏர்ஏசியா பிரிவுகளிலிருந்து, 2012ம் ஆண்டின் துவக்கத்திலிருந்து விமானங்களின செயல்பாடு துவங்க உள்ளது. ஏர்ஏசியா நிறுவனம் சார்பில், த‌ற்போதைய அளவில் 89 ஏர்பஸ் ஏ320 விமானங்கள் இயங்கி வருவதாகவும், அடுத்த 10 ஆண்டுகளி்ல், 300 விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளோம். 2009ம் ஆண்டை ஒப்பிடுகையில், 2010ம் ஆண்டில் நிறுவனத்தின் நிகரலாபம், கிட்டத்தட்ட 2 மடங்கு அளவிற்கு உயர்ந்துள்ளதாக அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)