பதிவு செய்த நாள்
11 டிச2011
09:21
சென்னை:புதிய சின்னத்துடன் 10 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ் கையெழுத்திட்ட, உள்பொதிந்த ஆங்கில எழுத்து ஏதுமில்லாமல், புதிய சின்னத்துடன் 10 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள், பின்பக்கம் அச்சடிக்கப்பட்ட ஆண்டான 2011ம் கொண்டதாக விரைவில், இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும்.புதிதாக சேர்க்கப்பட்ட சின்னத்தை தவிர வேறு எந்த மாற்றமுமின்றி, ஏற்கனவே வெளியிடப்பட்ட மகாத்மா காந்தி வரிசை 2005 நோட்டுகளை எல்லாவிதத்திலும் ஒத்ததாகவே இவை இருக்கும். இதற்கு முன், ரிசர்வ் வங்கி வெளியிட அனைத்து 10 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளும் சட்டப்படிசெல்லத்தக்கவையே.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|