பதிவு செய்த நாள்
11 டிச2011
13:44
புதுடில்லி : 2011ம் ஆண்டு துவக்கம் முதல் தற்போது வரை இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சரிவின் காரணமாக முதலீட்டாளர்கள் 500 பில்லியன் டாலர்களுக்கு மேல் இறந்துள்ளனர். இந்த சரிவு இன்னும் சில மாதங்களுக்கு தொடரும் என்ற அச்சமும் முதலீட்டாளர்களிடையே எழுந்துள்ளது. 2011ம் ஆண்டின் துவக்கத்தில் இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யப்பட்ட மொத்த தொகை ரூ.73 லட்சம் கோடியாகும். தற்போது ரூ.56.9 லட்சம் கோடியை எட்டி உள்ளது. உள்நாட்டு சந்தைகள் மற்றும் சர்வதேச சந்தைகளில் தற்போது ஏற்பட்டுள்ள சரிவு நிலை தொடர வாய்ப்பு அதிகரித்திருப்பதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 2011ம் ஆண்டு துவக்கத்தில் 16,213.46 புள்ளிகளாக இருந்த சென்செக்ஸ், அடுத்த 6 மாதங்களில் 14,500 புள்ளிகள் என்ற நிலையை அடைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|