நாட்டின் இரும்புத் தாது ஏற்றுமதி குறைந்ததுநாட்டின் இரும்புத் தாது ஏற்றுமதி குறைந்தது ... மின் உற்பத்தி சாதனங்கள்இறக்குமதிக்கு 14 சதவீத வரி? மின் உற்பத்தி சாதனங்கள்இறக்குமதிக்கு 14 சதவீத வரி? ...
முன்பேர வர்த்தகம் ரூ.122 லட்சம் கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 டிச
2011
01:06

புதுடில்லி:நடப்பு நிதியாண்டின், நவம்பர் மாதம் வரையிலுமான எட்டுமாத காலத்தில், நாட்டின் முன்பேர வர்த்தக சந்தைகளில் மேற்கொள்ளப்பட்ட வர்த்தகம், 122.33 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்டதை விட, 68 சதவீதம் (72.56 லட்சம் கோடி ரூபாய்) அதிகமாகும் என, பார்வார்டு மார்க்கெட் கமிஷன் தெரிவித்துள்ளது.நாட்டில், தேசிய அளவில் ஐந்து முன்பேர வர்த்தக சந்தைகளும், மண்டல அளவில் 18 முன்பேர வர்த்தக சந்தைகளும் உள்ளன. இதில் தங்கம், வெள்ளி, தாமிரம், எரிசக்தி மற்றும் வேளாண் பொருட்கள் ஆகியவற்றின் மீது வர்த்தகம் மேற்கொள்ளப்படுகிறது.
நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாத காலத்தில், தங்கம், வெள்ளி ஆகியவற்றின் மீதான வர்த்தகம், இரண்டு மடங்கிற்கும் மேல் அதிகரித்து, 32 லட்சத்து 81 ஆயிரத்து 86 கோடி ரூபாயிலிருந்து, 72 லட்சத்து 84 ஆயிரத்து 934 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.வேளாண் பொருட்கள் மீதான வர்த்தகம், 50 சதவீதம் வளர்ச்சிகண்டு, 8 லட்சத்து 36 ஆயிரத்து 605 கோடி ரூபாயிலிருந்து, 12 லட்சத்து 51 ஆயிரத்து 697 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.எரி பொருட்கள் மீதான வர்த்தகம், 35 சதவீதம் அதிகரித்து, 14 லட்சத்து 11 ஆயிரத்து 620 கோடி ரூபாயிலிருந்து, 19 லட்சத்து 2 ஆயிரத்து 42 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. தாமிரம் உள்ளிட்ட மதிப்புமிக்க உலோகங்கள் மீதான வர்த்தகம், 17 லட்சத்து 26 ஆயிரத்து 925 கோடி ரூபாயிலிருந்து, 17 லட்சத்து 95 ஆயிரத்து 158 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)