பதிவு செய்த நாள்
17 டிச2011
01:06
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின், நவம்பர் மாதம் வரையிலுமான எட்டுமாத காலத்தில், நாட்டின் முன்பேர வர்த்தக சந்தைகளில் மேற்கொள்ளப்பட்ட வர்த்தகம், 122.33 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்டதை விட, 68 சதவீதம் (72.56 லட்சம் கோடி ரூபாய்) அதிகமாகும் என, பார்வார்டு மார்க்கெட் கமிஷன் தெரிவித்துள்ளது.நாட்டில், தேசிய அளவில் ஐந்து முன்பேர வர்த்தக சந்தைகளும், மண்டல அளவில் 18 முன்பேர வர்த்தக சந்தைகளும் உள்ளன. இதில் தங்கம், வெள்ளி, தாமிரம், எரிசக்தி மற்றும் வேளாண் பொருட்கள் ஆகியவற்றின் மீது வர்த்தகம் மேற்கொள்ளப்படுகிறது.
நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாத காலத்தில், தங்கம், வெள்ளி ஆகியவற்றின் மீதான வர்த்தகம், இரண்டு மடங்கிற்கும் மேல் அதிகரித்து, 32 லட்சத்து 81 ஆயிரத்து 86 கோடி ரூபாயிலிருந்து, 72 லட்சத்து 84 ஆயிரத்து 934 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.வேளாண் பொருட்கள் மீதான வர்த்தகம், 50 சதவீதம் வளர்ச்சிகண்டு, 8 லட்சத்து 36 ஆயிரத்து 605 கோடி ரூபாயிலிருந்து, 12 லட்சத்து 51 ஆயிரத்து 697 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.எரி பொருட்கள் மீதான வர்த்தகம், 35 சதவீதம் அதிகரித்து, 14 லட்சத்து 11 ஆயிரத்து 620 கோடி ரூபாயிலிருந்து, 19 லட்சத்து 2 ஆயிரத்து 42 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. தாமிரம் உள்ளிட்ட மதிப்புமிக்க உலோகங்கள் மீதான வர்த்தகம், 17 லட்சத்து 26 ஆயிரத்து 925 கோடி ரூபாயிலிருந்து, 17 லட்சத்து 95 ஆயிரத்து 158 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|