மொபைல் போன் இறக்குமதி 14 சதவீதம் வளர்ச்சிமொபைல் போன் இறக்குமதி 14 சதவீதம் வளர்ச்சி ... ஒனிடாவின் 3டீ ஸ்மார்ட் "டிவி' ஒனிடாவின் 3டீ ஸ்மார்ட் "டிவி' ...
துறைமுகங்களின் விரிவாக்கத்திற்கு ரூ.2.77 லட்சம் கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 டிச
2011
00:07

புதுடில்லி: இந்திய துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறனை மேம்படுத்தும் திட்டங்களுக்கு, அடுத்த 10 ஆண்டுகளில், 2 லட்சத்து, 77 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், இத்துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறன், 313 கோடி டன்னாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து, மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கூறியதாவது:
இந்திய துறைமுகங்கள், சென்ற 2010-11ம் நிதியாண்டில், 87 கோடி டன் சரக்கை கையாண்டுள்ளன. இதில், முக்கிய துறைமுகங்கள், 57 கோடி டன் சரக்கையும், இதர துறைமுகங்கள் 34 சதவீதம், அதாவது, 30 கோடி டன் சரக்கையும் கையாண்டுள்ளன. முக்கிய துறைமுகங்கள் கையாண்ட மொத்த சரக்குகளில், சென்னை, கன்ட்லா, விசாகப்பட்டினம் மற்றும் ஜவகர்லால் நேரு துறைமுகம் ஆகியவற்றின் பங்களிப்பு, 48.4 சதவீதமாகும்.நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 80 சதவீதம், கடல் வழியாக நடைபெறுகிறது. இதில் 20 சதவீதம், சரக்கு பெட்டகங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படும் ஏற்றுமதியாகும். இந்தியாவில், 12 பெரிய துறைமுகங்களும், 176 சிறிய துறைமுகங்களும் உள்ளன. சென்ற 2010-11ம் நிதியாண்டில், நாட்டில் அதிக அளவில் சரக்குகளை கையாண்டதில், சென்னை துறைமுகம், நான்காவது இடத்தில் உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, துறைமுகங்களில், பெட்டகங்கள் வாயிலான சரக்குகளை கையாள்வது அதிகரித்து வருகிறது. வரும் 2020ம் நிதியாண்டில், இந்தியத் துறைமுகங்கள், 249 கோடி டன் சரக்குகளை கையாளும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சரக்கு ஏற்றுமதி அதிகரித்து வருவதற்கேற்ப, துறைமுகங்கள் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும். வரும் 2020ம் ஆண்டில், துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறன், 313 கோடி டன்னாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.குஜராத்தை அடுத்து, தமிழகத்தில் தான் 1,076 கி.மீ. நீளமுள்ளகடலோரப் பகுதி உள்ளது. இம்மாநிலத்தில் சென்னை, எண்ணூர், தூத்துக்குடி ஆகிய மூன்று முக்கிய துறைமுகங்கள் உள்ளன. மத்திய அரசின் கீழ் உள்ள ஒரே கார்ப்பரேட் துறைமுகம் என்ற சிறப்பை எண்ணூர் துறைமுகம் பெற்றுள்ளது.சென்னை துறைமுகத்தில், போதிய அளவிற்கு இணைப்பு சாலை வசதிகள் உள்ளிட்டவற்றின் பற்றாக்குறையால், சரக்கு போக்குவரத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னையை தீர்க்கும் நோக்கில், சென்னை - எண்ணூர் துறைமுகங்களை இணைக்கும் சாலை, சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையிலான பறக்கும் சாலை, ஸ்ரீபெரும்புதூரில் பெட்டக சரக்குகளை கையாள்வதற்கான பிரத்யேக மையம் உள்ளிட்ட திட்டங்களை விரைவாக செயல்படுத்தும் வகையில், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இத்திட்டங்கள் செயல்பாட்டிற்கு வரும்போது, சரக்கு போக்குவரத்து நெருக்கடி தீரும். இவ்வாறுஅமைச்சர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)