பதிவு செய்த நாள்
22 டிச2011
00:02
சென்னை: தனியார் துறையைச் சேர்ந்த ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், " ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க் ரூபிக்ஸ் என்ற இரட்டை பயன்பாடு கொண்ட இந்தியாவின் முதலாவது பிளாட்டினம் கிரெடிட் கார்டை அறிமுகம் செய்துள்ளது.
ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், ரூபிக்ஸ் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பிளாட்டினம் கிரெடிட் கார்டு மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க் ரூபிக்ஸ் மாஸ்டர் கார்டு பிளாட்டினம் சிப் கிரெடிட் கார்டு என இரண்டு கார்டுகளை உறுப்பினர்கள் பெறுவார்கள். அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் மற்றும் மாஸ்டர் கார்டு ஆகியவற்றின் பல்வேறு சலுகைகளை பெறும் வகையில் இந்த கார்டு, ஒன்றிணைக்கப்பட்டு ஒரே கார்டு கணக்கு, ஒரே ஸ்டேட்மெண்ட் மற்றும் ஒரே கட்டணம் கொண்டதாக இருக்கும்.ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க் ரூபிக்ஸ் இந்தியாவின் முதலாவது மெட்டல் மெம்ப்ரேன் கார்டு ஆகும். புகழ்பெற்ற சர்வதேச வடிவமைப்பாளர்களால் வடிவமைக்கப்பட்ட இந்த கார்டு, வழக்கமாக பிரிண்டிங் நுணுக்கங்களுக்கு பதிலாக மெட்டல் மெம்ப்ரேன் கொண்ட புதிய தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. இந்தியாவில், முதன்முறையாக இத்தகைய கார்டுகள் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த கார்டுகள் நீண்டகாலம் உழைக்கக்கூடியதாக இருக்கும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|