பதிவு செய்த நாள்
23 டிச2011
01:56
மும்பை:நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், மும்பையைச் சேர்ந்த முன் னணி நிறுவனங்கள், 16 ஆயிரத்து 691 கோடி ரூபாயை முன்கூட்டிய வரியாக செலுத்தியுள்ளன. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 16 ஆயிரத்து 750 கோடி ரூபாயாக அதிகரித்திருந்தது.
இதே மூன்றாவது காலாண்டில், டில்லியைச் சேர்ந்த 64 முன்னணி நிறுவனங்கள், 5, 965 கோடி ரூபாயை முன்கூட்டிய வரியாக செலுத்தியுள்ளன.இது,கடந்த நிதியாண் டின் இதே காலாண்டில் செலுத்திய வரியை விட, 8 சதவீதம் (6,472 கோடி ரூபாய்) குறைவாகும்.
எனினும்,ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான மூன்று காலாண்டுகளில்,இந் நிறுவனங் கள் செலுத்திய முன்கூட்டிய வரி,2 சதவீதம் வளர்ச்சிகண்டு,16,054கோடி ரூபாயி லிரு ந்து, 16ஆயிரத்து349 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.கடந்த 2010-11ம் முழு நிதியாண்டில், இந்நிறுவனங்கள் 22 ஆயிரத்து 33 கோடி ரூபாயை முன்கூட்டிய வரி யாக செலுத்தியுள்ளன.
இதே காலாண்டுகளில், பொதுத் துறையைச் சேர்ந்த,"செயில்'நிறுவனம் செலுத்திய முன்கூட்டிய வரி,707 கோடி ரூபாயிலிருந்து,253 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. மாருதி சுசூகி நிறுவனம்,செலுத்திய முன்கூட்டிய வரி,310 கோடி ரூபாயிலிருந்து,10 கோடி ரூபாயாகவும்,பார்தி ஏர்டெல் நிறுவனம் செலுத்திய வரி,279 கோடி ரூபாயி லிருந்து, 142 கோடி ரூபாயாகவும் சரிவடைந்துள்ளது.
அதேசமயம், பி.எச்.இ.எல். நிறுவனம் செலுத்திய முன் கூட்டிய வரி, 808 கோடி ரூபா யிலிருந்து,882 கோடி ரூபாயாகவும்,என்.டி.பி.சி., நிறுவனம் செலுத்திய வரி,596 கோடி ரூபாயிலிருந்து,836 கோடி ரூபாயாகவும்,கெயில் நிறுவனம் செலுத்திய வரி, 370 கோடி ரூபாயிலிருந்து, 445 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது என, வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|