பதிவு செய்த நாள்
23 டிச2011
14:37
புதுடில்லி : உரிம நியமங்களின் அடிப்படையில் 3ஜி ரோமிங் ஒப்பந்ததத்தை நிறுத்துமாறு முன்னணி மொபைல் நிறுவனங்களுக்கு மத்திய தொலைத் தொடர்பு துறை கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் உரிமங்களை பெறாமலேயே பார்தி, வோடோபோன், ஐடியா உள்ளிட்ட மொபைல் நிறுவனங்கள் தங்களுக்குள் ஒப்பந்தம் செய்து கொண்டு 3ஜி மொபைல் சேவையை வழங்கி வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக இந்த சேவையை நிறுத்துமாறு இந்நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதற்காக அபராத தொகை செலுத்தவும் தொலைத்தொடர்பு துறை செயலாளர் ஆர்.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இந்த நோட்டீஸ் பார்தி ஏர்டெல், வோடபோன் எஸ்ஸார், ஐடியா செல்லுலார் ஆகிய நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், டாடா டெலிசர்வீசஸ் மற்றும் ஏர்செல் ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே 3ஜி ஒப்பந்த சேவையை நிறுத்தி விட்டதாகவும் தொலைதொடர்பு துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|