மும்பைக்கு பறக்கும் சேலம் செங்கரும்புமும்பைக்கு பறக்கும் சேலம் செங்கரும்பு ...  15 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த அம்பானி சகோதரர்கள் 15 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த அம்பானி சகோதரர்கள் ...
பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதியில் பெரும் பின்னடைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 டிச
2011
02:37

புதுடில்லி:நாட்டின் பொறியியல் சாதனங்களின் ஏற்றுமதி, சென்ற நவம்பர் மாதத்தில், 38.43 சதவீதம் என்ற அளவில் எதிர்மறை வளர்ச்சியை கண்டுள்ளது என, பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (இ.இ.பி.சி.) அதன் தற்காலிக புள்ளி விவரத்தில் தெரிவித்துள்ளது.
வட்டி உயர்வு:ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், இயந்திரங்கள், தளவாடங்கள் உள்ளிட்ட பொறியியல் சாதனங்களின் ஏற்றுமதியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் மொத்த பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி யில், இந்நாடுகளின் பங்களிப்பு ஐந்தில் ஒரு பங்கு என்ற அளவில் உள்ளது.வட்டி உயர்வு, ஏற்றுமதிக்கான டீ.இ. பி.பீ வரிச் சலுகை திட்டம் ரத்து ஆகியவற்றின் காரணமாகவும், பொறியியல் சாதனங்களின் ஏற்றுமதி குறைந்துள்ளது.
எதிர்மறை வளர்ச்சி:இது குறித்து இ.இ.பி.சி.யின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆகஸ்ட் மாதத்தில், பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி 52.98 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தது. ஆனால், அடுத்து வந்த செப்டம்பர் (-0.92 சதவீதம்), அக்டோபர் (-6.66 சதவீதம்), நவம்பர் (-38.43 சதவீதம்) மாதங்களில் எதிர்மறை வளர்ச்சியைக் கண்டுள்ளது. நடப்பாண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில், நாட்டின் ஒட்டு மொத்த ஏற்றுமதி, 19 ஆயிரத்து 270 கோடி டாலராக (9 லட்சத்து 63 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதில், பொறியியல் சாதனங்களின் ஏற்றுமதி, 4,070 கோடி டாலராக (2 லட்சத்து 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) இருக்கும் என, மத்திய வர்த்தக அமைச்கம் தெரிவித்துள்ளது. இது, மொத்த ஏற்றுமதியில், 21.12 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு ஏப்ரல் - நவம்பர் காலத்தில், நாட்டின் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி, 3,330 கோடி டாலர் அளவிற்கு இருந்தது. இது, நடப்பாண்டு இதே காலத்தில், 22.21 சதவீதம் வளர்ச்சி கண்டு 4,070 கோடி டாலராக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி ஒட்டு மொத்த அளவில் சிறப்பாக இருந்தாலும், மாதாந்திர அடிப்படையில் சரிவடைந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில், மென்பொருள் குளறுபடி மற்றும் தவறான புள்ளி விவர பதிவால், நாட்டின் மொத்த ஏற்றுமதியில், 900 கோடி டாலர் அளவிற்கு அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது.பொறியியல் ஏற்றுமதியும் 1,500 கோடி டாலர் அதிகமாக மதிப்பிடப்பட்டிருந்தது. இதன்படி, ஏப்ரல் - அக்டோபர் வரையிலான பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி, 80 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட் டிருந்தது.
நவரத்தினங்கள்:ஆனால், ஏப்ரல் - நவம்பர் வரையிலான காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பொறியியல் பொருட்களுக்கான ஏற்றுமதி குறித்த விவரம், சென்ற மாதம் வெளியானது. இந்த புதிய புள்ளி விவரத்தின்படி, மதிப் பீட்டு காலத்தில், பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி 22-23 சதவீத அளவிற்கே வளர்ச்சி கண்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.இதே போன்று, பெட்ரோலியம்,நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதியில் 1,200 கோடி டாலர் அளவிற்கு குறைத்து மதிப்பிடப்பட்டிருந்தது. இதர, 500 பொருட்களின் ஏற்றுமதி குறித்த புள்ளி விவரங் களிலும், சிறிய அளவில் தவறுகள் நேர்ந்துள்ளன என வர்த்தகச் செயலர் ராகுல் குல்லார் சென்ற மாதம் தெரிவித்திருந்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)