பதிவு செய்த நாள்
29 டிச2011
02:37
புதுடில்லி:நாட்டின் பொறியியல் சாதனங்களின் ஏற்றுமதி, சென்ற நவம்பர் மாதத்தில், 38.43 சதவீதம் என்ற அளவில் எதிர்மறை வளர்ச்சியை கண்டுள்ளது என, பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (இ.இ.பி.சி.) அதன் தற்காலிக புள்ளி விவரத்தில் தெரிவித்துள்ளது.
வட்டி உயர்வு:ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், இயந்திரங்கள், தளவாடங்கள் உள்ளிட்ட பொறியியல் சாதனங்களின் ஏற்றுமதியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் மொத்த பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி யில், இந்நாடுகளின் பங்களிப்பு ஐந்தில் ஒரு பங்கு என்ற அளவில் உள்ளது.வட்டி உயர்வு, ஏற்றுமதிக்கான டீ.இ. பி.பீ வரிச் சலுகை திட்டம் ரத்து ஆகியவற்றின் காரணமாகவும், பொறியியல் சாதனங்களின் ஏற்றுமதி குறைந்துள்ளது.
எதிர்மறை வளர்ச்சி:இது குறித்து இ.இ.பி.சி.யின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆகஸ்ட் மாதத்தில், பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி 52.98 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தது. ஆனால், அடுத்து வந்த செப்டம்பர் (-0.92 சதவீதம்), அக்டோபர் (-6.66 சதவீதம்), நவம்பர் (-38.43 சதவீதம்) மாதங்களில் எதிர்மறை வளர்ச்சியைக் கண்டுள்ளது. நடப்பாண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில், நாட்டின் ஒட்டு மொத்த ஏற்றுமதி, 19 ஆயிரத்து 270 கோடி டாலராக (9 லட்சத்து 63 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதில், பொறியியல் சாதனங்களின் ஏற்றுமதி, 4,070 கோடி டாலராக (2 லட்சத்து 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) இருக்கும் என, மத்திய வர்த்தக அமைச்கம் தெரிவித்துள்ளது. இது, மொத்த ஏற்றுமதியில், 21.12 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு ஏப்ரல் - நவம்பர் காலத்தில், நாட்டின் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி, 3,330 கோடி டாலர் அளவிற்கு இருந்தது. இது, நடப்பாண்டு இதே காலத்தில், 22.21 சதவீதம் வளர்ச்சி கண்டு 4,070 கோடி டாலராக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி ஒட்டு மொத்த அளவில் சிறப்பாக இருந்தாலும், மாதாந்திர அடிப்படையில் சரிவடைந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில், மென்பொருள் குளறுபடி மற்றும் தவறான புள்ளி விவர பதிவால், நாட்டின் மொத்த ஏற்றுமதியில், 900 கோடி டாலர் அளவிற்கு அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது.பொறியியல் ஏற்றுமதியும் 1,500 கோடி டாலர் அதிகமாக மதிப்பிடப்பட்டிருந்தது. இதன்படி, ஏப்ரல் - அக்டோபர் வரையிலான பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி, 80 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட் டிருந்தது.
நவரத்தினங்கள்:ஆனால், ஏப்ரல் - நவம்பர் வரையிலான காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பொறியியல் பொருட்களுக்கான ஏற்றுமதி குறித்த விவரம், சென்ற மாதம் வெளியானது. இந்த புதிய புள்ளி விவரத்தின்படி, மதிப் பீட்டு காலத்தில், பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி 22-23 சதவீத அளவிற்கே வளர்ச்சி கண்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.இதே போன்று, பெட்ரோலியம்,நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதியில் 1,200 கோடி டாலர் அளவிற்கு குறைத்து மதிப்பிடப்பட்டிருந்தது. இதர, 500 பொருட்களின் ஏற்றுமதி குறித்த புள்ளி விவரங் களிலும், சிறிய அளவில் தவறுகள் நேர்ந்துள்ளன என வர்த்தகச் செயலர் ராகுல் குல்லார் சென்ற மாதம் தெரிவித்திருந்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|