பதிவு செய்த நாள்
30 டிச2011
00:42
நடப்பு ஆண்டில், அக்டோபர் வரையிலான பத்து மாதங்களில், தமிழகத்திற்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, 6 சதவீதம் வளர்ச்சி கண்டு, 11.23 கோடியாக உயர்ந்துள்ளது. இது, 2010ம் முழு காலண்டர் ஆண்டில், 10.58 கோடியாக இருந்தது.மதிப்பீட்டு காலத்தில், உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10.98 கோடியாகவும், வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை, 25 லட்சத்து 74 ஆயிரத்து 51 ஆகவும் உள்ளது. இது, 2010ம் ஆண்டில் முறையே, 10.30 கோடியாகவும், 28 லட்சத்து 4 ஆயிரத்து 504 ஆகவும் இருந்தது.
தமிழகத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், பல்வேறு திட்டங்கள் வாயிலாக, சுற்றுலாத் தலங்களின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன.இவற்றில், மாநில அரசின் 11.92 கோடி ரூபாய் நிதியுதவித் திட்டங்களும், சுற்றுலா மையங்களில் சாலை வசதிக்காக, 10 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களும் அடங்கும். மேலும், மத்திய அரசின் 21.78 கோடி ரூபாய் நிதியுதவியில், சுற்றுலாத் துறை மேம்பாட்டிற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.தமிழக அரசு, சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும், 550 கோடி ரூபாய் மதிப்பிலான, 7 அம்ச திட்டங்களை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச பொருளாதார மந்த நிலையால், இந்தியா வரும் வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|