தூத்துக்குடி துறைமுகம்சரக்கு கையாள்வதில் சாதனைதூத்துக்குடி துறைமுகம்சரக்கு கையாள்வதில் சாதனை ... உணவுப் பொருள் பணவீக்கம் 0.42 சதவீதமாக குறைவு உணவுப் பொருள் பணவீக்கம் 0.42 சதவீதமாக குறைவு ...
தமிழகம் வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு:-பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து-
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 டிச
2011
00:42

நடப்பு ஆண்டில், அக்டோபர் வரையிலான பத்து மாதங்களில், தமிழகத்திற்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, 6 சதவீதம் வளர்ச்சி கண்டு, 11.23 கோடியாக உயர்ந்துள்ளது. இது, 2010ம் முழு காலண்டர் ஆண்டில், 10.58 கோடியாக இருந்தது.மதிப்பீட்டு காலத்தில், உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10.98 கோடியாகவும், வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை, 25 லட்சத்து 74 ஆயிரத்து 51 ஆகவும் உள்ளது. இது, 2010ம் ஆண்டில் முறையே, 10.30 கோடியாகவும், 28 லட்சத்து 4 ஆயிரத்து 504 ஆகவும் இருந்தது.
தமிழகத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், பல்வேறு திட்டங்கள் வாயிலாக, சுற்றுலாத் தலங்களின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன.இவற்றில், மாநில அரசின் 11.92 கோடி ரூபாய் நிதியுதவித் திட்டங்களும், சுற்றுலா மையங்களில் சாலை வசதிக்காக, 10 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களும் அடங்கும். மேலும், மத்திய அரசின் 21.78 கோடி ரூபாய் நிதியுதவியில், சுற்றுலாத் துறை மேம்பாட்டிற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.தமிழக அரசு, சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும், 550 கோடி ரூபாய் மதிப்பிலான, 7 அம்ச திட்டங்களை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச பொருளாதார மந்த நிலையால், இந்தியா வரும் வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)