பதிவு செய்த நாள்
30 டிச2011
11:07
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. கடந்த மூன்று நாட்களாக சரிவில் இருந்த பங்குச்சந்தை இன்று சற்று ஏற்றம் கண்டுள்ளது. இன்றைய பங்குச்சந்தையில் வாங்கும் போக்கு அதிகரித்து காணப்பட்டதினால் சென்செக்ஸ் 74 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 74.59 புள்ளிகள் அதிகரித்து 15618.52 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 21.28 புள்ளிகள் அதிகரித்து 4667.60 புள்ளிகளோடு காணப் பட்டது. நேற்று நடைபெற்ற வர்த்தகத்தில், வங்கி, உருக்கு, தகவல் தொழில்நுட்ப நிறுவனப் பங்குகளுக்கு அதிக தேவை இருந்தது. மோட்டார் வாகனம், பொறியியல், ரியல் எஸ்டேட், தொலைத்தொடர்பு உள்ளிட்ட துறை சார்ந்த நிறுவன பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|