ஏப்ரல் - நவம்பர் வரையிலான காலத்தில் ஆயுள் காப்பீட்டு பிரிமிய வருவாய் 19 சதவீதம் சரிவுஏப்ரல் - நவம்பர் வரையிலான காலத்தில் ஆயுள் காப்பீட்டு பிரிமிய வருவாய் 19 ... ... இரும்புத் தாது ஏற்றுமதி 4 கோடி டன்னாக குறைவு இரும்புத் தாது ஏற்றுமதி 4 கோடி டன்னாக குறைவு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வட்டி விகித உயர்வு, பொருளாதார மந்த நிலையால்... இந்திய வங்கிகள் வழங்கும் கடன் குறைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜன
2012
00:07

- பிசினஸ் ஸ்டாண்டர்டு உடன் இணைந்து -
நடப்பு டிŒம்பர் மாதம் 16ம் @ததி நிலவரப்படி, வங்கிகள் வழங்கிய கடன் வளர்ச்சி, கடந்த 21 மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. வட்டி உயர்வு, பொருளாதார மந்த நிலை, புதிய முதலீடுகள் குறைந்தது போன்றவற்றால், வங்கிகள் வழங்கிய கடன்கள் குறைந்து போயுள்ளன.
வங்கிகள் வழங்கும் கடன் வளர்ச்சி, 18 Œதவீதமாக இருக்கும் என்று, ரிŒர்வ் வங்கி மதிப்பிட்டிருந்தது. ஆனால், டிசம்பர் 16ம் தேதி வரையிலான காலத்தில், வங்கிகள் வழங்கிய கடன், 17.08 சதவீதம் என்ற அளவிற்@க வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்த 21 மாதங்களில் இல்லாத, குறைந்தபட்ச அளவாகும்.
இது குறித்து, டெலாய்டு நிறுவனத்தின் இயக்குனர் மோனிஷ் ஷா கூறியதாவது:
பொருளாதார சுணக்க நிலையால், பொது மக்கள் தங்கள் முதலீட்டு திட்டங்களை ஒத்தி வைத்துள்ளனர். பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், கடந்த 2010ம் ஆண்டு மார்ச் மாதம் முதல், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை, 3.75 Œதவீதம் வரை அதிகரித்துள்ளது.
இதையடுத்து, வங்கிகள், கடன்களுக்கான வட்டி விகிதத்தை, 2.50 Œதவீதம் வரை உயர்த்தியுள்ளன. இதன் காரணமாக, நாட்டின் தொழில்துறை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. சென்ற அக்டோபர் மாதத்தில், இத்துறை 5.1 சதவீத எதிர்மறை வளர்ச்சியைக் கண்டுள்ளது.தற்போது, பணம் வீக்கம் குறைந்து வருவதால், ரிசர்வ் வங்கி, ரெப்போ ரேட் வட்டி விகிதங்களை உயர்த்தவில்லை.
இதனால், வரும் ஜனவரி முதல் மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில், வங்கிகள் வழங்கும் கடன்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு மோனிஷ் ஷா தெரிவித்தார்.
வங்கிகள் வழங்கிய உணவு சாரா கடன்கள், டிசம்பர் 16ம் தேதி வரையிலான காலத்தில், 17.2 சதவீதம் வளர்ச்சி கண்டு, 44 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இது, öŒன்ற 2010ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி நிலவரப்படி, 37.53 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. வங்கிகள் வழங்கிய கடன்கள், தொடர்ந்து ஆறு வாரங்களாக
18 சதவீதத்திற்கும் கீழ் இருந்து வருகிறது.இருப்பினும், வங்களில் மேற்கொள்ளப்படும் டெபாசிட், டிசம்பர் 16ம் தேதி வரையிலான காலத்தில், 58.32 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
இது, கடந்த ஆண்டு டிசம்பர் 17ம் தேதி வரையிலான காலத்தில், 49.50 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. ஆக, நடப்பாண்டில் வங்கிகளில் மேற்கொள்ளப்பட்ட டெபாசிட், 17.8 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
ரிசர்வ் வங்கி, நடப்பாண்டில், வங்கிகள் வழங்கும் கடன்கள், 17-18 சதவீதம் என்ற அளவில் அதிகரித்திருக்கும் என, மறு மதிப்பீடு செய்துள்ளது. இது, முதல் மதிப்பீட்டில், 19 சதவீதமாக இருக்கும் என தெரிவித்திருந்தது. மேலும், வங்கிகளில் மேற்கொள்ளப்படும் டொபசிட் வளர்ச்சி, 17 சதவீதமாக குறையும் எனவும் கூறியுள்ளது.சென்ற 2010-11ம் நிதியாண்டில், வங்கிகள் வழங்கிய கடன்கள், 21.5 சதவீதமாகவும், மேற்கொள்ளப்பட்ட டெபாசிட், 15.5 சதவீதமாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)