இரும்புத் தாது ஏற்றுமதி 4 கோடி டன்னாக குறைவுஇரும்புத் தாது ஏற்றுமதி 4 கோடி டன்னாக குறைவு ... 2012ல் ஐந்து லட்சம் வேலை வாய்ப்பு உருவாகும் என நிபுணர்கள் கணிப்பு 2012ல் ஐந்து லட்சம் வேலை வாய்ப்பு உருவாகும் என நிபுணர்கள் கணிப்பு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச் சந்தை மந்த நிலையால் 2011ம் ஆண்டில் மத்திய அரசுக்கு ரூ.5 லட்சம் கோடி இழப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜன
2012
00:12

பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து கடந்த 2011ம் ஆண்டு, இந்தியப் பங்குச் சந்தையின் வீழ்ச்சியால், மத்திய அரசுக்கு, 5 .17 லட்Œம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களில், மத்திய அரசு குறிப்பிடத்தக்க அளவிற்கு, பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ளது. இந்நிறுவனங்களின் பங்கின் விலை வீழ்ச்சி கண்டுள்ளதால், மத்திய அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. 71 பொதுத் துறை நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அவற்றின் பங்கு விலை வீழ்ச்சி காரணமாக, மத்திய அரசுக்கு, 5.17 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
பொதுத்துறை நிறுவனங்கள் சென்ற ஆண்டு, மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் சந்தை மதிப்பு, 19.5 லட்சம் கோடி ரூபாய்அளவிற்கு குறைந்தது. இதில், மத்திய அரசின் பங்கு, 26.5 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
öŒன்ற ஆண்டு தொடக்கத்தில், பொதுத்துறை நிறுவனங்களில், மத்திய அரசு கொண்டிருந்த பங்குகளின் மதிப்பு, 15.87 லட்Œம் கோடி ரூபாயாக இருந்தது. இது, டிசம்பர் 30ம் தேதி நடைபெற்ற, ஆண்டின் இறுதி வர்த்தக தினத்தன்று, 10.70 லட்சம் கோடி ரூபாயாக குறைந்து ‌போனது. இதனால், பொதுத் துறை நிறுவனங்களில், மத்திய அரசு கொண்டுள்ள பங்குகளின் மதிப்பும், 21.75 சவீதத்தில் இருந்து 20 சதவீதமாக சரிவடைந்துள்ளது.ஆ#விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 71 நிறுவனங்களில், 34 நிறுவனப் பங்குகள் மீது, தொடர்ந்து வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இவை, பீ.எஸ்.இ. குறியீட்டு எண் கணக்கிட உதவும் 200 நிறுவனங்களில் அடங்கியுள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 34 நிறுவனங்களில், மத்திய அர” கொண்டுள்ள பங்குகளின் சந்தை மதிப்பு, 3.75 லட்Œம் கோடி ரூபாய் என்ற அளவிற்கு குறைந்துள்ளது. இந்நிறுவனங்களில், பெட் ரோநெட் எல்.என்.ஜி (25 சதவீதம்), இந்திரபிரஸ்தா காஸ் (10 சதவீதம்) மற்றும் பவர் கிரிட் கார்ப்ப‌ரேஷன் (2 சதவீதம்) ஆகிய மூன்று நிறுவனங்கள் மட்டு‌மே, ஆண்டு இறுதியை லாபக் கணக்கில் முடித்தன. @கால் இந்தியா நிறுவனத்தின் பங்கு, 4 சதவீத இழப்பை கண்டது. மத்திய அரசுக்கு பெருத்த இழப்பை தந்தவற்றுள்,ஸ்டேட் பங்க் ஆப் இந்தியா, எம்.எம்.டி.சி., என்.எம்.டீ.சி., மற்றும் ஓ.என்.ஜி.சி ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இவற்றில், எம்.எம்.டி.சி.,யில் மத்திய அரசு கொண்டுள்ள பங்குகளின் சந்தை மதிப்பு, 62 ஆயிரத்து 831 கோடி ரூபாய்க்கும் அதிகமாக குறைந்துள்ளது. சந்தை மதிப்புஇது, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில், 42.4 சதவீதம் (44 ஆயிரத்து 944 கோடி ரூபாய்) சரிவடைந்துள்ளது. ஓ.என்.ஜி.சி., மற்றும் என்.எம்.டீ.சி., நிறுவனங்களின், மத்திய அர” கொண்டுள்ள பங்குகளின் சந்தை மதிப்பு முறை‌யே 42 ஆயிரம் கோடி ரூபாய் மற்றும் 41 ஆயிரத்து 695 @காடி ரூபா# என்ற அளவிலும் வீழ்ச்சி கண்டுள்ளது. தனியார் துறையில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகளின் சந்தை மதிப்பு, 1 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் குறைந்துள்ளது. அது போன்று, டாட்டா குழும நிறுவனங்களின் பங்குகளின் சந்தை மதிப்பு, 87 ஆயிரம் கோடி ரூபாயும், அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமத்தின் பங்குகளின் சந்தை மதிப்பு, 61 ஆயிரம் கோடி ரூபாயும் சரிவடைந்துள்ளன. அதானி குழுமத்தின் பங்குகளின் சந்தை மதிப்பு, 58 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்துள்ளது. சென்செக்ஸ் 5,054 புள்ளிகள் சரிவுகடந்த 2011ல், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ் 5,054 புள்ளிகள் சரிவடைந்தது. இச்Œந்தையின் மதிப்பு 53.40 லட்சம் @காடியாக குறைந்து @பானது. முதலீட்டாளர்கள், அவர்கள் வைத்துள்ள பங்குகளை விற்றிருந்தால், 20 லட்சம் கோடி ரூபாயை இழந்திருப்பர்.முந்தைய 2010ம் ஆண்டு இறுதியில், சென்செக்ஸ்' 20,500 புள்ளிகளில் முடிவடைந்தது. இது, என்ற 2011ம் ஆண்டு இறுதியில், 15,455 புள்ளிகளாக சரிவடைந்தது. இ‌தே ஆண்டுகளில், 10 கிராம் தங்கத்தின் விலை, 20 ஆயிரத்து 585 ரூபாயில் இருந்து, 27 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 47 ஆயிரத்து 30 ரூபாயில் இருந்து, 50 ஆயிரத்து 965 ரூபாயாகவும், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, 92.52 ரூபாயில் இருந்து 108 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)