கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் முன்னணி நிறுவனங்களின் வாகன விற்பனை அதிகரிப்புகடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் முன்னணி நிறுவனங்களின் வாகன விற்பனை ... ... கொள்முதல் விலை அறிவிக்காமல் இழுபறி : தமிழகத்தில் கரும்பு விவசாயிகள் அதிருப்தி கொள்முதல் விலை அறிவிக்காமல் இழுபறி : தமிழகத்தில் கரும்பு விவசாயிகள் ... ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு வர்த்தகம் லாபத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜன
2012
00:08

மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம், 2012ம் புத்தாண்டின், முதல் வர்த்தக தினமான திங்கள் கிழமையன்று லாபத்துடன் முடிவடைந்தது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு, ஒரு சில ஐரோப்பிய நாடுகளின் பங்குச் சந்தைகளுக்கு விடுமுறையாக இருந்தது. மேலும், பல அன்னிய நிதி நிறுவனங்கள் முழு அளவில் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடவில்லை.
திங்களன்று மதியம் வரை இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் அதிக ஏற்ற இறக்கமின்றி இருந்தது. பங்குச் சந்தையில் தகுதிவாய்ந்த அன்னிய முதலீட்டாளர்கள் நேரடியாக முதலீடு செய்ய மத்திய அரச அனுமதிக்க உள்ளதாக செய்தி வெளியானது. எனினும், இதனால் பெரிய அளவில் ஏற்றம் காணப்படவில்லை.
அதேசமயம், இதர ஆசிய பங்குச் சந்தைகளில் பங்கு வியாபாரம் ஓரளவிற்கு நன்கு இருந்தது. இதனால், மதியத்திற்கு பிறகு மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் குறிப்பிட்ட சில துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், நுகர்வோர் சாதனங்கள், எண்ணெய், எரிவாயு, தகவல் தொழில்நுட்பம், உலோகம், பொறியியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்திருந்தது. இருப்பினும், நுகர்பொருட்கள், மோட்டார் வாகனம், மின்சாரம், ரியல் எஸ்டேட், மருந்து போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைவாக இருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 63 புள்ளிகள் அதிகரித்து, 15,517.92 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தினிடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக 15,542.85 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 15,358.02 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 19 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், 11 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 12.45 புள்ளிகள் உயர்ந்து, 4,636.75 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தினிடையே அதிகபட்சமாக 4,645.95 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 4,588.05 புள்ளிகள் வரையிலும் சென்றது.




Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)