தமிழகத்தில் 9 இடங்களில் கோவில் - திருப்பதி தேவஸ்தானம்தமிழகத்தில் 9 இடங்களில் கோவில் - திருப்பதி தேவஸ்தானம் ... நடப்பு 2011-12ம் நிதியாண்டில்... நாட்டின் கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி உயர வாய்ப்பு நடப்பு 2011-12ம் நிதியாண்டில்... நாட்டின் கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி உயர ... ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
சிறு தேயிலை விவசாயிகள் நலன் காக்க ரூ.300 கோடியில் இயக்குனரகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜன
2012
01:33

குன்னூர்:'சிறு தேயிலை விவசாயிகள் மேம்பாட்டிற்கு, பிரத்யேக இயக்குனரகம் அமைக்க, 300 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது' என, தேயிலை வாரிய தலைவர் கூறினார்.இந்திய தேயிலை வாரிய கூட்டம், முதன் முறையாக குன்னூர் 'உபாசி' அரங்கில் நடைபெற்றது. வாரிய உறுப்பினர்கள் எம்.பி., விசுவநாதன், டாக்டர்.ராமு, கோஷி பேபி சார்பில் முன்வைக்கப்பட்ட கருத்துகள்; சிறு தேயிலை விவசாயிகள், வருமான இழப்பு கருதி, 5 ஆண்டுக்கு ஒரு முறை தங்கள் தோட்டங்களை கவாத்து செய்யாததால், பசுந்தேயிலை தரம் குறைந்து, தரமற்ற உற்பத்திக்கு வழி வகுக்கிறது. தென்னிந்தியாவில், 1 லட்சம் ஏக்கர் தேயிலைத் தோட்டத்தில், ஆண்டுக்கு 20 ஆயிரம் ஏக்கர் தோட்டத்தை கவாத்து செய்தால், 5 ஆண்டுகளில் முழு பரப்பளவை கவாத்து செய்ய முடியும். வருமான இழப்பை ஈடுகட்ட, சிறு விவசாய சங்கங்கள் மூலம், விவசாயிகளுக்கு சுழல் நிதி வழங்க வேண்டும்; மறுநடவு திட்டத்தை ஊக்குவிக்க வங்கிக் கடன் வழங்க வேண்டும் உட்பட, பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தேயிலை வாரிய தலைவர் பானு பேசுகையில், ''சிறு தேயிலை விவசாயிகள் நலன் காக்க, அவர்களின் அனைத்து தேவை, குறைகளை தீர்க்க, வரும் 2012 -2017 ஐந்தாண்டுத் திட்டத்தில், 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில், சிறு விவசாயிகளுக்கென பிரத்யேக இயக்குனரகம் துவங்கப்பட்டு, 3,000 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட தோட் டத்துக்கு, ஒரு கள அதிகாரி, 25 தொழிற்சாலைகளுக்கு ஒரு ஆலோசனை அதிகாரி என, நாடு முழுவதும், 95 அலுவலர்கள் பணியமர்த்தப்படவுள்ளனர். மறு ஏற்றுமதிக்காக இறக்குமதி செய்யப்படும் தேயிலைத் தூளின் தரம், 12வது ஐந்தாண்டுத் திட்டக் குழு கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். இடைப்பட்ட காலத்தில் இறக்குமதி செய்யப்படும் தேயிலைத் தூளின் தரத்தை கண்காணிக்க, நிபுணர் குழு அமைக்கப்படும். கவாத்துக்கான மானியம், மறுநடவு திட்டம் குறித்து, உரிய ஆய்வுக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார். தேயிலை ஏற்றுமதி:சென்ற 2011ம் ஆண்டில், நாட்டின் தேயிலை ஏற்றுமதி, 18.50 கோடி கிலோவாக குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டில் மேற்கொள்ளப் பட்ட ஏற்றுமதியை விட, 4.1 சதவீதம் (19.30 கோடி கிலோ) குறைவாகும்.சென்ற அக்டோபர் மாத புள்ளி விவரப்படி, 14.90 கோடி கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது, இதற்கும் முந்தைய ஆண்டின் இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 8 சதவீதம் (16.30 கோடி கிலோ) குறைவாகும்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)