நடப்பு 2011-12ம் நிதியாண்டில்... நாட்டின் கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி உயர வாய்ப்புநடப்பு 2011-12ம் நிதியாண்டில்... நாட்டின் கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி உயர ... ... துவங்கியது சுற்றுலா பொருட்காட்சி துவங்கியது சுற்றுலா பொருட்காட்சி ...
ரயில் டிக்கெட் முன்பதிவு: மொபைல்போனில் எளிது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜன
2012
10:15

புதுடில்லி: மொபைல்போன் மூலமாக, ரயில் பயண டிக்கெட் முன்பதிவுக்கு, ரயில்வே துறை புதிய வசதியை துவக்கி உள்ளது. ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய, நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இ-டிக்கெட் மூலம் முன்பதிவு செய்யும் வசதி வந்த பிறகு, பலருக்கும் இது பயனுள்ளதாக இருந்தது. இதில், அடுத்த கட்டமாக, மொபைல்போனை பயன்படுத்தி, ரயில் பயண முன்பதிவு டிக்கெட் பெறும் வசதியை, இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் அறிமுகப்படுத்தி உள்ளது. இன்டர்நெட் வசதி கொண்ட மொபைல்போன்களை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே, இத்திட்டம் பொருந்தும். இவ்வசதியுள்ளவர்கள், முதலில் மொபைல்போன் மூலமாக, தனது பெயர் மற்றும் பல தகவல்களை பதிவு செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து, ஐ.டி., மற்றும் பாஸ்வேர்ட் ஆகியவற்றை, முன்பதிவு மையம் பயணிக்கு வழங்கும். அதன் பிறகே, டிக்கெட் முன்பதிவை செய்ய இயலும். முன்பதிவு செய்ததும், பயணிக்கு பி.என். ஆர்.எண், ரயில் எண், பயணத் தேதி, எந்த வகுப்பு போன்ற தகவல்கள் (எலக்ட்ரானிக் ரிசர்வேஷன் ஸ்லிப்) அனுப்பப்படும்.
இப்புதிய வசதி காரணமாக, பயணிகள் அத்தகவல்களை பிரின்ட் அவுட் எடுக்கத் தேவையிருக்காது. தங்களது மொபைல்போனில் பதிவான தகவல்களை, ரயில் பயணத்தின் போது காண்பித்தால் போதுமானது. முதல் கட்டமாக துவக்கப்பட்டுள்ள இவ்வசதியை, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கான சேவைக் கட்டணம், இ-டிக்கெட் பெறும்போது வசூலிக்கப்படுவதைப் போன்றே, தூங்கும் வசதிக்கு ஒரு டிக்கெட்டிற்கு 10 ரூபாயும், உயர் வகுப்புகளுக்கு, 20 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)