பதிவு செய்த நாள்
07 ஜன2012
00:34
புதுடில்லி:வருமான வரி செலுத்துவோர், 100 ரூபாய்க்கு குறைவாக பாக்கி வைத்திருந்தால், அது தொடர்பாக, அனுப்பப்படும் கடிதத்திற்கு, பதில் அளிக்கத் தேவையில்லை என்று வருமான வரித் துறை அறிவித்துள்ளது.வருமான வரி செலுத்துவோர், 1, 4, 6 ரூபாய்பாக்கி வைத்திருந்தால் கூட, அந்த சொற்பத் தொகையை உடனே செலுத்துமாறு வருமான வரித்துறை சார்பில் பெங்களூருவில் உள்ள மத்திய தகவல் பரிமாற்று மையம் கடிதம் அனுப்புகிறது. இதனால், எரிச்சலும், மன உளைச்சலும் ஏற்படுவதாக, வரி செலுத்துவோர் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, 100 ரூபாய்க்கு குறைவாக வரி பாக்கி வைத்துள்ளோருக்கு கடிதம் அனுப்ப வேண்டாம் என, தகவல் பரிமாற்று மையத்திற்கு வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், இத்தொகை, அடுத்தாண்டு, கூடுதலாக செலுத்தப்பட்ட தொகையை திரும்ப வழங்கும் போது, பிடித்தம் செய்து கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.வருமான வரித்துறைக்கும், வரி செலுத்துவோருக்கும் இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில், இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இத்துறையை சேர்ந்த உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|