பதிவு செய்த நாள்
09 ஜன2012
00:05
மும்பை: நடப்பு 2011-12ம் சாகுபடி பருவத்தில் (அக்டோபர் - செப்டம்பர்), நாட்டின் பருத்தி உற்பத்தி, 3.25 கோடி பொதிகளாக ( ஒரு பொதி=170 கிலோ) குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில், பருத்தி உற்பத்தியில் குஜராத் முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் மகாராஷ்டிராவும், மூன்றாம் இடத்தில் ஆந்திராவும் உள்ளன. இந்த இரு மாநிலங்களில், பருவம் தவறி பெய்த மழையால் பருத்தி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.இந்திய பருத்தி ஆலோசனை வாரியம், நடப்பு பருவத்தில் பருத்தி உற்பத்தி 3.56 கோடி பொதிகளாக இருக்கும் என மதிப்பிட்டுள்ளது. அதே சமயம் , இந்தியாவின் பருத்தி உற்பத்தி 3.45 கோடி பொதிகளாகவும், சர்வதேச பருத்தி உற்பத்தி, சாதனை அளவாக 12.34 கோடி பொதிகள் (ஒரு பொதி=218 கிலோ) என்ற அளவிலும் இருக்கும் என, அமெரிக்க வேளாண் துறை மதிப்பிட்டுள்ளது.நாட்டில் பருத்தி பயிரிடப்படும் பரப்பளவு, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், 9.9 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1.22 கோடி ஹெக்டேராக அதிகரித்துள்ளது. எனினும், பருவ நிலை மாற்றம், மழை உள்ளிட்ட காரணங்களால்,ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் பருத்தி உற்பத்தி பாதிப்புக்குள்ளாகி யுள்ளதாக, இந்திய ஜவுளி கூட்டமைப்பின் பொதுச் öŒயலர் டீ.@க. நாயர் தெரிவித்துள்ளார்.மத்திய அரசு ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளை நீக்கியதையடுத்து, நடப்பாண்டில் நாட்டின் பருத்தி ஏற்றுமதி முந்தைய ஆண்டைக் காட்டிலும், 14 சதவீதம் அதிகரித்து, 80 லட்சம் பொதிகளாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சீனாவிற்கான பருத்தி ஏற்றுமதி சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. இந்திய ஏற்றுமதியாளர்கள், சென்ற அக்டோபர் முதல் 44 லட்சம் பருத்தி பொதிகளை சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதற்காக பதிவு செய்துள்ளனர். வரும் ஜூலை இறுதிக்குள், சீனாவின் பருத்தி இறக்குமதி, 27 லட்சம் பொதியிலிருந்து, 33 லட்சம் பருத்தி பொதிகளாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, இந்திய பருத்தி ஏற்றுமதியாளர்களுக்கு சிறப்பான வர்த்தக வா#ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.இவ்வாறு சுந்தர் பேசினார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|