பொருளாதார வளர்ச்சியில் இந்தியா மூன்றாவது இடத்திற்கு வரும்பொருளாதார வளர்ச்சியில் இந்தியா மூன்றாவது இடத்திற்கு வரும் ... நடப்பு 2011-12ம் நிதியாண்டில்நாட்டின் ஏற்றுமதி இலக்கு எட்ட வாய்ப்பில்லை நடப்பு 2011-12ம் நிதியாண்டில்நாட்டின் ஏற்றுமதி இலக்கு எட்ட வாய்ப்பில்லை ...
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை 7.15 லட்சமாக அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜன
2012
00:07

புதுடில்லி: இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.சென்ற டிசம்பர் மாதத்தில், இந்தியாவிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 7 லட்சத்து 15 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய 2010ம் ஆண்டின் இதே மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கையை விட, 5.2 சதவீதம் (6 லட்சத்து 80 ஆயிரம் பேர்) அதிகம்.இந்த பயணிகளின் எண்ணிக்கை, கடந்த 2009ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில், 10.4 சதவீதம் அதிகரித்து, 6 லட்சத்து 16 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் இருந்தது.இதே மாதங்களில், சுற்றுலா பயணிகள் மூலம் கிடைத்த வருவாய், 26 சதவீதம் வளர்ச்சிகண்டு, 7,039 கோடி ரூபாயிலிருந்து, 8,870 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, 2009ம் ஆண்டின் இதே மாதத்தில், 7,042 ரூபாயாக இருந்தது.சென்ற 2011ம் முழு ஆண்டில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மூலம் கிடைத்த வருவாய், ரூபாய் மதிப்பின் அடிப்படையில், 77 ஆயிரத்து 591 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய 2010ல், கிடைத்த வருவாயை விட, 19.6 சதவீதம் (64 ஆயிரத்து 889 கோடி ரூபாய்) அதிகம்.மதிப்பீட்டு காலத்தில், வருகை தந்த வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை, 8.9 சதவீதம் வளர்ச்சிகண்டு, 50 லட்சத்து 78 ஆயிரம் என்ற எண்ணிக்கையிலிருந்து, 60 லட்சத்து 29 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)