பதிவு செய்த நாள்
09 ஜன2012
00:07
புதுடில்லி: இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.சென்ற டிசம்பர் மாதத்தில், இந்தியாவிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 7 லட்சத்து 15 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய 2010ம் ஆண்டின் இதே மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கையை விட, 5.2 சதவீதம் (6 லட்சத்து 80 ஆயிரம் பேர்) அதிகம்.இந்த பயணிகளின் எண்ணிக்கை, கடந்த 2009ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில், 10.4 சதவீதம் அதிகரித்து, 6 லட்சத்து 16 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் இருந்தது.இதே மாதங்களில், சுற்றுலா பயணிகள் மூலம் கிடைத்த வருவாய், 26 சதவீதம் வளர்ச்சிகண்டு, 7,039 கோடி ரூபாயிலிருந்து, 8,870 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, 2009ம் ஆண்டின் இதே மாதத்தில், 7,042 ரூபாயாக இருந்தது.சென்ற 2011ம் முழு ஆண்டில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மூலம் கிடைத்த வருவாய், ரூபாய் மதிப்பின் அடிப்படையில், 77 ஆயிரத்து 591 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய 2010ல், கிடைத்த வருவாயை விட, 19.6 சதவீதம் (64 ஆயிரத்து 889 கோடி ரூபாய்) அதிகம்.மதிப்பீட்டு காலத்தில், வருகை தந்த வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை, 8.9 சதவீதம் வளர்ச்சிகண்டு, 50 லட்சத்து 78 ஆயிரம் என்ற எண்ணிக்கையிலிருந்து, 60 லட்சத்து 29 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|