பதிவு செய்த நாள்
09 ஜன2012
00:09
புதுடில்லி: சென்ற 2011ம் ஆண்டு டிசம்பர் நிலவரப்படி, கோதுமை, பருப்பு, எண்ணெ# வித்துக்கள் உள்ளிட்டவற்றின் பயிரிடப்படும் பரப்பளவு குறைந்துள்ளது என, மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில் கோதுமை, 276.43 லட்சம் ஹெக்டேர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ளது. இது, 2010ம் ஆண்டின் இதே காலத்தில், 277.95 லட்சம் ஹெக்டேராக இருந்தது.மத்திய பிரதேசத்தில் தான் அதிகபட்சமாக, 4.69 லட்சம் ஹெக்டேர் அளவிற்கு கோதுமை பயிரிடப்பட்டுள்ளது. அடுத்த இடங்களில், ராஜஸ்தான் (3.20 லட்சம் ஹெக்டேர்), பீகார் (72 ஆயிரம் ஹெக்டேர்), ஜார்க்கண்ட் (37 ஆயிரம் ஹெக்டேர், சத்திஸ்கர் (18 ஆயிரம் ஹெக்டேர்) ஆகிய மாநிலங்கள் உள்ளன.இதே காலத்தில், நெல் பயிரிடும் பரப்பளவு, 64 ஆயிரம் ஹெக்டேர் அதிகரித்து, 3.49 லட்சத்தில் இருந்து, 4.13 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது. ஆந்திரா, அசாம், ஒடிசா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில், நடவுப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.மதிப்பீட்டு காலத்தில், பருப்பு வகைகள் பயிரிடும் பரப்பளவு, 138.54 லட்சம் ஹெக்டேராகவும் (140.28 லட்சம் ஹெக்டேர்), கடுகு 64.55 லட்சம் ஹெக்டேர் (68.21 லட்சம் ஹெக்டேர்) என்ற அளவிலும் சரிவடைந்துள்ளது.நிலக்கடலை பயிரிடும் பரப்பளவு 4.06 லட்சம் ஹெக்டேர் (4.18 லட்சம் ஹெக்டேர்), சூரிய காந்தி 3.50 லட்சம் ஹெக்டேர் ( 4.40 லட்சம் ஹெக்டேர்) என்ற அளவில் குறைந்துள்ளது.பயிரிடப்பட்டுள்ள எண்ணெய் வித்துக்களின் மொத்த பரப்பளவு, 84.57 லட்சம் ஹெக்டேரிலிருந்து, 79.22 லட்சம் ஹெக்டேராக சரிவடைந்துள்ளது என, அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|