பதிவு செய்த நாள்
11 ஜன2012
09:53
புதுச்சேரி: தினமலர் நடத்தும், "ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ-2012' புதுச்சேரியில் உள்ள ஏ.எப்.டி., மைதானத்தில், நாளை (12ம் தேதி) காலை துவங்குகிறது. இந்த வீட்டு உபயோகப் பொருட்களின் நுகர்வோர் கண்காட்சி, வரும் 16ம் தேதி வரை, ஐந்து நாட்கள் நடக்கின்றன. கண்காட்சியில், தாய்லாந்து, பாகிஸ்தான் போன்ற வெளிநாட்டு ஸ்டால்களும், குஜராத், அரியானா உள்ளிட்ட, வெளிமாநில ஸ்டால்களும் இடம் பெற்றுள்ளன. "ஷாப்பிங்' செய்ய வருபவர்களை திணறடிக்க, 200க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் விதவிதமான பொருட்களுடன், பலவிதமான சலுகைகளுடன் காத்திருக்கின்றன.
மங்கையருக்காக... மங்கையரை மயக்கும் அழகுக் கலை, எம்ப்ராய்டரி, மெஹந்தி அரங்கங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. கண்காட்சியில் அனைவரையும் மகிழ்விப்பதற்காக, முதன் முறையாக சாகச விளையாட்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.குட்டீஸ்களுக்கு "கேம் ஷோ': கண்காட்சிக்கு பெற்றோர்களுடன் வருகை தரும் குட்டீஸ்களை மகிழ்விப்பதற்காக, "கேம் ஷோ' நிகழ்ச்சிகள், ஓவியம் வரைதல் மற்றும் இலவசமாக பலூன்கள் வழங்கப்பட உள்ளன. மேலும், அனைத்து தரப்பினருக்கும் ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்களும், கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|