இறக்குமதி செலவு கூடியதால் கிராம்பு விலை உயர்கிறதுஇறக்குமதி செலவு கூடியதால் கிராம்பு விலை உயர்கிறது ... டேங்கர் லாரி ஸ்டிரைக்: தினமும் 20 லட்சம் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு டேங்கர் லாரி ஸ்டிரைக்: தினமும் 20 லட்சம் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ...
களைகட்டியது பொங்கல் திருவிழா : கரும்பு,மஞ்சள் கிழங்கு குவிந்தது!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜன
2012
10:30

தூத்துக்குடி : பொங்கல் பண்டிக்கைக்கு தேவையான கரும்பு, காய்கறி, மஞ்சள் கிழங்கு போன்றவை தூத்துக்குடியில் அதிக அளவில் விற்பனைக்காக வெளியிடங்களில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. இவற்றை வாங்குவதற்காக நேற்று ஏராளமான பொதுமக்கள் தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டிற்கு வந்தனர்.

தமிழர் திருநாளாகவும், இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் தை முதல் நாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டிற்கான பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையில் முக்கிய பங்கு வகிக்கும் கரும்பு, மஞ்சள்கிழங்கு, பனங்கிழங்கு, வாழை இலை, வாழைத்தார், காய்கறிகள், கிழங்கு வகைகள் போன்றவை வெளியிடங்களில் அதிக அளவில் விற்பனைக்காக தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மதுரை, தேனி போன்ற இடங்களில் இருந்து கரும்பு, ராமநாதபுரம், உடன்குடி போன்ற பகுதிகளில் இருந்து பனங்கிழங்கும், ஈரோட்டில் இருந்து மஞ்சள் கிழங்கும் லாரிகள் மூலம் தூத்துக்குடியில் உள்ள காமராஜ் காய்கறி மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இவற்றை வாங்குவதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நேற்று அதிக அளவில் பொதுமக்கள் தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டிற்கு வந்ததால் அங்கு பெரும் ஜனநெருக்கடி ஏற்பட்டது.

கடந்த நான்கு நாட்களாக பஸ் போக்குவரத்து நிறுத்தம் காரணமாக பொங்கல் பண்டிகை விற்பனை மந்தமாக இருந்தது. நேற்று முதல் பொங்கல் பண்டிகை வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)