பதிவு செய்த நாள்
14 ஜன2012
10:30
தூத்துக்குடி : பொங்கல் பண்டிக்கைக்கு தேவையான கரும்பு, காய்கறி, மஞ்சள் கிழங்கு போன்றவை தூத்துக்குடியில் அதிக அளவில் விற்பனைக்காக வெளியிடங்களில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. இவற்றை வாங்குவதற்காக நேற்று ஏராளமான பொதுமக்கள் தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டிற்கு வந்தனர்.
தமிழர் திருநாளாகவும், இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் தை முதல் நாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டிற்கான பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையில் முக்கிய பங்கு வகிக்கும் கரும்பு, மஞ்சள்கிழங்கு, பனங்கிழங்கு, வாழை இலை, வாழைத்தார், காய்கறிகள், கிழங்கு வகைகள் போன்றவை வெளியிடங்களில் அதிக அளவில் விற்பனைக்காக தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மதுரை, தேனி போன்ற இடங்களில் இருந்து கரும்பு, ராமநாதபுரம், உடன்குடி போன்ற பகுதிகளில் இருந்து பனங்கிழங்கும், ஈரோட்டில் இருந்து மஞ்சள் கிழங்கும் லாரிகள் மூலம் தூத்துக்குடியில் உள்ள காமராஜ் காய்கறி மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இவற்றை வாங்குவதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நேற்று அதிக அளவில் பொதுமக்கள் தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டிற்கு வந்ததால் அங்கு பெரும் ஜனநெருக்கடி ஏற்பட்டது.
கடந்த நான்கு நாட்களாக பஸ் போக்குவரத்து நிறுத்தம் காரணமாக பொங்கல் பண்டிகை விற்பனை மந்தமாக இருந்தது. நேற்று முதல் பொங்கல் பண்டிகை வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|