இந்திய நிறுவனங்களின் அன்னிய முதலீடு 146 கோடி டாலர்இந்திய நிறுவனங்களின் அன்னிய முதலீடு 146 கோடி டாலர் ... சிக்கனத்தின் மூலம் 20 சதவீதம் மின்சாரத்தை சேமிக்கலாம் சிக்கனத்தின் மூலம் 20 சதவீதம் மின்சாரத்தை சேமிக்கலாம் ...
செயில் நிறுவனம் தீக்கற்கள் உற்பத்தியை அதிகரிக்க திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2012
00:04


-அ.பாஸ்கரன்-
""செயில் நிறுவனம் ஆண்டுக்கு, 9 ஆயிரம் கோடி டன் தீக்கற்களை கூடுதலாக உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது,'' என, இந்நிறுவனத்தின் தலைவர் வர்மா தெரிவித்துள்ளார்.
செயில் நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட, சேலம் பர்ன்அன்கோ "ரிப்ராக்டரி' (எஸ்.ஆர். சி.எல்.,) பிரிவின் துவக்க விழாவில் வர்மா பேசியதாவது:
உலக அளவில், உலைக்கலன்களில், ஆண்டுக்கு, 4.5 கோடி டன் தீக்கற்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதில், சீனா, 3 கோடி டன் பயன்படுத்துகிறது. இந்தியா, 25 சதவீதம் பயன்படுத்துகிறது.
"செயில்' கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள, சேலம் பர்ன்அன்கோ தொழிற்சாலையில் ஆண்டுக்கு, 51 சதவீதம் தீக்கற்கள் உற்பத்தி செய்யப்படும். அதேபோல, "செயில்' நிர்வாகத்தின் கீழ் செயல்படும், மீதமுள்ள ரிப்ரெக்டரியில் நவீன தொழில் நுட்பம், புதிய யுக்தி மற்றும் உயர்வகை சாதனங்களை பயன்படுத்தி, 9 ஆயிரம் கோடி டன் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
"பர்ன் அன்கோ'வில், ஆண்டுக்கு, 18 ஆயிரம் டன் மேக்னசைட் வெட்டியெடுக்க லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதை, அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
பாராளுமன்ற நிலைக்குழு தொழிற்துறை தலைவரும், எம்.பி.,யும் மான சிவா பேசிய
தாவது:நாட்டில், நலிவடைந்துள்ள தொழிற்சாலைகளை கணக்கெடுத்து, அதை மீண்டும் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில், பர்ன்அன்கோ, செயில் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டு, மேம்படுத்தப்படுகிறது. எனவே, அதிகாரிகள், தொழிலாளர்கள் என பாகுபாடின்றி, உழைத்து, உற்பத்தியை, 2 மடங்காக அதிகரித்து, லாபத்தை ஈட்டுவதோடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் வித்திட வேண்டும் என்றார்.முன்னதாக, வெள்ளைக்கல் பவுடரை பார்வையிட்ட செயில் தலைவர் வர்மா, தீப்பந்தம் மூலம், தீக்கற்களுக்கான சூளையை பற்ற வைத்தார். தொடர்ந்து, பர்ன்அன்கோ மூத்த ஊழியர்கள்,
5 பேரை கவுரவித்து, ப்ளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்கி பாராட்டினார்.இந்தி எஃகு துறை கூடுதல் செயலர் மச்சேந்திரநாதன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ராஜேந்திரன், ராஜா உள்ளிட்ட அதிகாரிகள், தொழிலாளர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.


Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)