பதிவு செய்த நாள்
18 ஜன2012
00:05
புதுடில்லி: மத்திய அரசு, சேவைகள் துறை சார்ந்த பணவீக்கத்தை கண்டறியும் வகையில், புதிய கணக்கீட்டு முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.தற்போது, மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையிலான பொதுப் பணவீக்கம், உணவுப் பொருள் பணவீக்கம் உள்ளிட்டவை, குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியிடப்பட்டு வருகின்றன.இந்நிலையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 55 சதவீத பங்களிப்பை கொண்டுள்ள சேவைகள் துறை பணவீக்கமும், அறிமுகமாக உள்ளது. இதற்காக, காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் நிதி ஆலோசகர், ஸ்ரீராம் தரனிகந்தி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.இக்குழு, முதற்கட்டமாக காப்பீட்டு துறையில், பாலிசி அடிப்படையிலான பணவீக்கத்தை கணக்கிடுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. சேவைகள் துறை பணவீக்கத்தில், வங்கிகள், விமான போக்குவரத்து உள்ளிட்ட, 8-10 சேவைகள் இடம் பெறும் என தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|