ஐ.டி.சி. நிறுவனம்நிகர விற்பனை ரூ.6,105 கோடிஐ.டி.சி. நிறுவனம்நிகர விற்பனை ரூ.6,105 கோடி ... பீகார் சுற்றுலா துறையை மேம்படுத்த திட்டம் பீகார் சுற்றுலா துறையை மேம்படுத்த திட்டம் ...
வருமான வரித்துறைக்கு எதிராக...வோடபோன் வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2012
00:18

புதுடில்லி:வோடபோன் நிறுவனம் 11 ஆயிரம் கோடி ரூபாய் வருமான வரி செலுத்த வேண்டும் என்ற மும்பை ஐகோர்ட்டின் தீர்ப்பை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
வோடபோன் இண்டர்நேஷனல் ஹோல்டிங்ஸ் நிறுவனம், ஹாங்காங்கை சேர்ந்த ஹட்சிஸன் குழுமத்தின், ஹட்சிஸன் - எஸ்ஸார் நிறுவனத்தின், 67 சதவீத பங்குகளை 2007ம் ஆண்டு மே மாதம் வாங்கியது. 1,120 கோடி டாலர் மதிப்பிலான இந்த பரிவர்த்தனைக்கு, 11 ஆயிரம் கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை,வோடபோன் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது.
ஆனால், இந்தியாவிற்கு வெளியே மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைக்கு, வரி விதிப்பு பொருந்தாது என வோடபோன் தெரிவித்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த மும்பை ஐகோர்ட், 11 ஆயிரம் கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும் என தீர்ப்பளித்தது.
இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா, நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், ஸ்வதந்தர் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, மும்பை ஐகோர்ட்டின் உத்தரவை தள்ளுபடி செய்தது.
நீதிபதிகள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:இந்தியாவிற்கு வெளியே, பதிவு செய்த இரண்டு நிறுவனங்களுக்குள் நடைபெற்ற பரிவர்த்தனை என்பதால், அது வருமான வரித்துறையின் சட்ட வரையறைக்கு உட்படாது. எனவே, இந்த பரிவர்த்தனை, வருமான வரிச் சட்டம் 163வது பிரிவின் கீழ் வராது.இவ்வழக்கு தொடர்பாக வோடபோன் நிறுவனம் டெபாசிட் செய்துள்ள 2,500 கோடி ரூபாயை இரண்டு மாதங்களுக்குள், 4 சதவீத வட்டியுடன் வருமான வரித்துறை வழங்க வேண்டும்.
மேலும், வோடபோன் சார்பில் சுப்ரீம் கோர்ட் பதிவாளரிடம் வழங்கப்பட்ட 8,500 கோடி ரூபாய் வங்கி உத்தரவாதத்தையும், ஒரு மாதத்திற்குள் திரும்ப அளிக்க வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு குறித்து, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்துடன் அவசர ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சல்மான் குர்ஷித், தீர்ப்பின் முழு விவரம் கிடைத்த பின்பே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)