பதிவு செய்த நாள்
22 ஜன2012
03:00
டாட்டா குழுமத்தைச் சேர்ந்த டைட்டன் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், 200 கோடி ரூபாய் திட்ட செலவில், விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. வேர்ல்ட் ஆப் டைட்டன் ஷோரூமில், கை கடிகாரங்களும், தனிஷ்க் ஸ்டோர்களில் தங்க ஆபரணங்களும், பாஸ்ட் டிராக் ஸ்டோர்ஸில் கைகடிகாரம் மற்றும் கூலிங் கிளாஸ் போன்றவையும், விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
டைட்டன் நிறுவனம், ஒவ்வொரு நிதியாண்டிலும், 200 கோடி ரூபாய் முதலீட்டில், விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, நடப்பு 2011-12ம் நிதியாண்டில், இதுவரையிலுமாக, 150 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. இதையடுத்து, இந்நிறுவனம், கூடுதலாக, 30 டைட்டன் ஷோரூம்களையும், 15 தனிஷ்க் ஸ்டோர்களையும், 60 பாஸ்ட் டிராக் ஸ்டோர்களையும் திறந்துள்ளது.
வரும் 2012-13ம் நிதியாண்டில், 200 கோடி ரூபாய் திட்ட செலவில், விரிவாக்க நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது. இதன்மூலம், டைட்டன் ஷோரூம்களின் எண்ணிக்கை, 400ஐ தாண்டும். நிறுவனத்தின் விற்பனையும், 25 சதவீதம் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|