பதிவு செய்த நாள்
22 ஜன2012
03:08
சென்னை : ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டு வரும் பிரின்ஸ் பவுண்டேஷன்ஸ் நிறுவனம், சென்னை தண்டையார்பேட்டையில் "பிரின்ஸ் வில்லேஜ் பேஸ் ஐஐ' என்ற அடுக்கமாடி குடியிருப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
சர்வதேச தரத்தில், 6.5 ஏக்கர் நிலப்பரப்பில் இப்புதிய குடியிருப்பு திட்டம் அமைய உள்ளது. இதில், ஒன்று (580 சதுர அடி), இரண்டு (940-985 சதுர அடி), மற்றும் மூன்று (1140-1560 சதுர அடி) படுக்கை அறைகள் கொண்ட குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. மொத்த உள்ள நிலப்பரப்பில், 62 சதவீதம் பசுமையான நிலப்பரப்பாக அமைய உள்ளது இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும்.
இப்புதிய குடியிருப்பு திட்டத்தில், 460 வீடுகள் கட்டப்பட உள்ளன. மேலும், 10 ஆயிரம் சதுர அடியில், பல்பொருள் அங்காடி, ஏ.டி.எம்., மருந்து கடை உள்ளிட்ட வர்த்தக பயன்பாட்டு கட்டடங்கள் கட்டப்பட உள்ளது. இது தவிர, கிளப் ஹவுஸ், டென்னிஸ் மற்றும் கூடைப்பந்தாட்ட மைதானம், குளிர் சாதன வசதியுள்ள உடற்பயிற்சி கூடம், குழந்தைகள் விளையாடுவதற்கான பூங்கா உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. தற்போது தொடங்கப்பட்டுள்ள, இத்திட்டம் வரும் மூன்று ஆண்டு காலத்திற்குள் பயன்பாட்டுக்குள் வரும் என, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|