நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு ரூ.5,050 கோடி குறைவுநாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு ரூ.5,050 கோடி குறைவு ... பனிப்பொழிவால் பூ விலை கடும் உயர்வு: மல்லிகை கிலோ 1,700 ரூபாய் பனிப்பொழிவால் பூ விலை கடும் உயர்வு: மல்லிகை கிலோ 1,700 ரூபாய் ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
புளி வரத்தால் ரூ. 20 விலை வீழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2012
13:01

தென் மாநிலங்களில் இருந்து தை மாதம் முன்னதாகவே புதிய புளி வரத்து அதிகரிப்பால், கிலோவுக்கு 20 ரூபாய் வரை சரிந்துள்ளது. மேலும் குறைய வாய்ப்புள்ளது என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களில் புளி அதிகளவு உற்பத்தியாகிறது. கொட்டை புளி உற்பத்தியில் கர்நாடக மாநிலம் முதலிடம் வகிக்கிறது. தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.தமிழகத்தில் நெடுஞ்சாலைகள், கிராமப்பகுதி சாலைகளில் உள்ள புளிய மரங்களை வெட்டுவதே, புளி உற்பத்து குறைவுக்கு காரணம். தவிர, தமிழகத்தில் உற்பத்தியாகும் கொட்டை புளி அதிகம் ஏற்றுமதியாகிறது.சென்றாண்டு புளி சீஸன் உற்பத்தி பாதிப்பால், விலையும் கிடுகிடுவென உயர்ந்தது. தற்போது, தை மாதம் புளி சீஸன் துவங்குவதற்கு முன்னதாகவே, வரத்து வெகுவாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக புதிய புளியை தேக்கி வைத்து, பழைய புளியை விற்பனை செய்ய வியாபாரிகள் முனைப்பு காட்டுகின்றனர். இதனால் விலையும் கிலோவுக்கு, 10 முதல், 20 ரூபாய் வரை குறைந்துள்ளது.

ஈரோடு மளிகை மண்டி உரிமையாளர் நடராஜன் கூறியதாவது: கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், மாரண்டஹள்ளி, பஞ்சப்பள்ளி, பாப்பாரப்பட்டி, தர்மபுரி, சேலம், ஈரோடு மாவட்டம் தாளவாடி, சத்தி பகுதியில் இருந்து கொட்டை புளி வரத்தாகிறது.இங்கு மரத்தில் இருந்து அறுவடை செய்து தோசை புளி, உதிரி திடம் (தும்கூர்), உதிரி திடம் (குறைவு), போன்றவை தனித்தனியாக பிரிக்கப்பட்டு புளியை சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். சென்றாண்டு உள்நாட்டில் புளி உற்பத்தி குறைவால் விலையும் தாறுமாறாக உயர்ந்தது.புளி உற்பத்தியை பொருத்தே விலை ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. தை மாதத்தில் புதிய புளி சீஸன் துவங்கி விடும். தற்போது, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் புளி அறுவடை நடப்பதால், வரத்தும் அதிகரித்துள்ளது.தோசை புளி கிலோ 125க்கு விற்றது, 20 ரூபாய் குறைந்து, 105 ரூபாய்க்கும், உதிரி திடம் (தும்கூர்) 130க்கு விற்றது, 15 ரூபாய் குறைந்து, 110 ரூபாய்க்கும், உதிரி திடம் குறைந்த புளி 105க்கு விற்றது, 15 ரூபாய் குறைந்து 90 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்குள் விலை குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)