பதிவு செய்த நாள்
24 ஜன2012
00:08
புதுடில்லி: மக்காச் சோளத்திற்கான தேவை அதிகரித்துள்ளதால், நடப்பு 2011-12ம் ஆண்டின் சந்தைப்படுத்தும் பருவத்தில் (அக்டோபர் - செப்டம்பர்), இதன் ஏற்றுமதி, 30 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, கடந்த 2010-11ம் ஆண்டின் இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 7 சதவீதம் (28 லட்சம் டன்) அதிகமாகும்.
உள்நாட்டில், ஸ்டார்ச், கோழி தீவனம், மதுபானங்கள் தயாரிப்புஆலைகள் போன்றவற்றிற்கு மக்காச் சோளம் பயன்படுத்தப்படுகிறது. மேலும், தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இவை அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.நடப்பு பருவத்தில், அமெரிக்காவில் மக்காச் சோளம் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்நாட்டை விட, இந்திய மக்காச் சோளத்தின் விலை, டன்னுக்கு, 40-60 டாலர் குறைவாக உள்ளது. இதனால், தென் கிழக்கு நாடுகள், இந்திய சோளத்தை அதிகளவில் வாங்கத் தொடங்கியுள்ளன.
சென்ற டிசம்பர் மாதத்தில், அனைத்து செலவுகளையும் உள்ளடக்கிய, இந்திய மக்காச் சோளத்தின் விலை, டன் ஒன்றுக்கு, 240-245 டாலர் என்றளவில் இருந்தது. இந்தியாவிலிருந்து இதுவரை, 10 லட்சம் டன் மக்காச்சோளம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது, முழு பருவத்தில், 30 லட்சம் டன்னாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.நடப்பு பயிர் பருவத்தில் (ஜூலை-ஜூன்), மக்காச்சோளம் உற்பத்தி, 2.10 கோடி டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, இதற்கு முந்தைய பருவத்தில், மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, (2.13 கோடி டன்) சற்று குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.நடப்பு கரிப் மற்றும் ரபி பருவத்தில், மக்காச் சோளம் உற்பத்தி குறையும் என மதிப்பீடு செய்யப்பட்டாலும், இது தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு போதுமானதாக இருக்கும் என தெரிகிறது.அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளில், மக்காச்சோளம் உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில், நடப்பு பருவத்தில், சர்வதேச அளவில் இதன் உற்பத்தி, 4 சதவீதம் அதிகரித்து, 96.10 கோடி டன்னாக உயரும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது, டில்லியில், மொத்த விற்பனையில் ஒரு குவிண்டால் மக்காச்சோளத்தின் விலை, 1,250 ரூபாய் என்றளவில் உள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|