பதிவு செய்த நாள்
24 ஜன2012
00:10
மும்பை: நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் தொடக்க தினமான திங்கள்கிழமையன்று ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. உலகின் பல்வேறு நாடுகளிலும், பங்கு வியாபாரம் குறிப்பிடும்படியாக இல்லை. இந்நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், மாருதி சுசூகி உள்ளிட்ட ஒரு சில முன்னணி நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் நன்கு இல்லாததும், ரிசர்வ் வங்கி, இன்று அதன் நிதிக் கொள்கையை வெளியிட உள்ளதாலும், பல முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதிலிருந்து ஒதுங்கி இருந்தனர்.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், நுகர் பொருட்கள், தொழில்நுட்பம், ரியல் எஸ்டேட், மோட்டார் வாகனம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. அதேசமயம், எண்ணெய்,எரிவாயு, உலோகம், நுகர்வோர் சாதனங்கள் போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை குறைந்திருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது 12.72 புள்ளிகள் உயர்ந்து, 16,751.73 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக 16,784 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 16,659.32 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 19 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், 11 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.அதேசமயம், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 2.35 புள்ளிகள் குறைந்து, 5,046.25 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,095.55 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,021.35 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|