சிமென்ட் விற்பனை 14  சதவீதம் வளர்ச்சி - பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -சிமென்ட் விற்பனை 14 சதவீதம் வளர்ச்சி - பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து - ... கார்கள் விலை உயர்வு கார்கள் விலை உயர்வு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
"சென்செக்ஸ்' 13 புள்ளிகள் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2012
00:10

மும்பை: நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் தொடக்க தினமான திங்கள்கிழமையன்று ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. உலகின் பல்வேறு நாடுகளிலும், பங்கு வியாபாரம் குறிப்பிடும்படியாக இல்லை. இந்நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், மாருதி சுசூகி உள்ளிட்ட ஒரு சில முன்னணி நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் நன்கு இல்லாததும், ரிசர்வ் வங்கி, இன்று அதன் நிதிக் கொள்கையை வெளியிட உள்ளதாலும், பல முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதிலிருந்து ஒதுங்கி இருந்தனர்.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், நுகர் பொருட்கள், தொழில்நுட்பம், ரியல் எஸ்டேட், மோட்டார் வாகனம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. அதேசமயம், எண்ணெய்,எரிவாயு, உலோகம், நுகர்வோர் சாதனங்கள் போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை குறைந்திருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது 12.72 புள்ளிகள் உயர்ந்து, 16,751.73 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக 16,784 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 16,659.32 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 19 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், 11 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.அதேசமயம், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 2.35 புள்ளிகள் குறைந்து, 5,046.25 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,095.55 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,021.35 புள்ளிகள் வரையிலும் சென்றது.


Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)