பதிவு செய்த நாள்
09 பிப்2012
09:27
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் நான்காம் நாளான இன்று சரிவுடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில்(9.20 மணியளவில்), மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 65.74 புள்ளிகள் குறைந்து 17641.58 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 18.95 புள்ளிகள் குறைந்து 5349.20 புள்ளிகளோடு காணப் பட்டது. நேற்றைய வர்த்தகத்தில், வரும் நிதியாண்டில், இந்தியாவில், ஐ.டி. பீ.பி.ஓ., துறைகளின் வருவாய் 11-14 சதவீதம் அதிகரித்து, 7,600-7,800 கோடி டாலராக உயரும் என்ற நாஸ்காம் அமைப்பின் செய்தி வெளியானதையடுத்து, தகவல் தொழில்நுட்ப பங்குகளின் விலை அதிகரித்தது. இது தவிர, ரியல் எஸ்டேட், உலோகம், நுகர்வோர் சாதனங்கள் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளும் அதிக விலைக்கு கைமாறின. இருப்பினும், எண்ணெய், எரிவாயு, மருந்து, உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைவாக இருந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|