கைவினை பொருட்கள் ஏற்றுமதி 24 சதவீதம் வளர்ச்சிகைவினை பொருட்கள் ஏற்றுமதி 24 சதவீதம் வளர்ச்சி ... பெட்ரோகெமிக்கல் துறையில் வேலைவாய்ப்பு:"அசோசெம்' அமைப்பு மதிப்பீடு பெட்ரோகெமிக்கல் துறையில் வேலைவாய்ப்பு:"அசோசெம்' அமைப்பு மதிப்பீடு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ஓ.என்.ஜி.சி. பங்குகளைஏலத்தில் விற்க திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 பிப்
2012
01:46

புதுடில்லி:பொதுத்துறையை சேர்ந்த ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின், 5 சதவீத பங்குகளை பங்குச் சந்தையில் ஏலம் விட்டு, 12 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில், பொதுத்துறை நிறுவனங்களில், கொண்டுள்ள மொத்த பங்கு மூலதனத்தில், 5-10 சதவீத பங்குகளை விற்பனை செய்து, 40 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.ஆனால், பங்குச் சந்தை நிலவரம் சரியில்லாததால், இதுவரை 1,400 கோடி ரூபாய் மட்டுமே திரட்டப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டு முடிய இன்னும் ஒன்றரை மாதமே உள்ள நிலையில், ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை பங்குச் சந்தையில் ஏலம் விடவும், இதே போன்று, பீ.எச்.இ.எல்., நிறுவனத்தின் பங்குகளை ஏலம் விடுவதன் மூலம், 2,500 கோடி ரூபாயும் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் கிடைத்ததும் ஏல விற்பனை நடைபெறும்.ஏலம் வெற்றி பெறுவதைப் பொறுத்து, இதே முறையில் இதர பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கும்.
பங்குச் சந்தையில், ஏல முறையிலான பங்கு விற்பனை குறித்த விதிமுறைகளை பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, 'செபி' இம்மாத தொடக்கத்தில் வெளியிட்டது. இதையடுத்து, முதன் முறையாக இத்தகைய முறையில், ஓ.என்ஜி.சி., மற்றும் பீ.எச்.இ.எல்., நிறுவனங்களின் பங்கு விற்பனை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)