பதிவு செய்த நாள்
14 பிப்2012
09:34

மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று சரிவுடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில் (9.12 மணியளவில்), மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 5.38 புள்ளிகள் குறைந்து 17767.46 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 9.40 புள்ளிகள் குறைந்து 5380.80 புள்ளிகளோடு காணப் பட்டது.நாட்டின் பங்கு வர்த்தகம் வாரத்தின் தொடக்க தினமான திங்கள்கிழமையன்று நன்கு இருந்தது. கிரீஸ் நாட்டு கடன் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், அந்நாட்டு அரசு, சிக்கன நடவடிக்கை திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதையடுத்து, ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், உலோகம், மோட்டார் வாகனம், நுகர்வோர் சாதனங்கள் மற்றும் வங்கி உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.
இருப்பினும், பொறியியல், நுகர் பொருட்கள், தகவல் தொழில்நுட்ப துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைந்து காணப்பட்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|