கயிறு பொருட்கள் ஏற்றுமதி ரூ.1,000 கோடியை எட்டும்கயிறு பொருட்கள் ஏற்றுமதி ரூ.1,000 கோடியை எட்டும் ... நாட்டின் துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 46 கோடி டன் நாட்டின் துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 46 கோடி டன் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் மீண்டும் 18,000 புள்ளிகளுக்கும் கீழ் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 பிப்
2012
01:54

மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம் தொடர்ந்து, மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமை யன்றும் சரிவுடன் முடிவடைந்தது. அமெரிக்காவில், பொருளாதார வளர்ச்சிக்கான அறிகுறிகள் தென்படத் துவங்கியுள்ளது என்ற செய்தியால், ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது. ஆனால், லாப நோக்கம் கருதி அதிக எண்ணிக்கையில் பங்குகள் விற்பனை செய்யப்பட்டதால், இந்திய பங்குச் சந்தைகளில் பல துறைகளைச்சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை குறைந்துபோனது.மேலும், ஈரான் பிரச்னையால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. இதனால், பணவீக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில், 80 சதவீதம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதன் விலை உயர்வு இந்தியப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நிலைப்பாட்டால், இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மந்தமாக இருந்தது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில்,பொறியியல், தகவல் தொழில்நுட்பம், மின்சாரம் உள்ளிட்டத் துறைகளை சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவை இருந்தது. அதேசமயம், ஸ்@டட் @பங்க் ஆப் இந்தியா, டீ.எல்.எப்., எச்.டீ.எப்.சி., மற்றும் எல் அண்டு டி ஆகிய நிறுவனப் பங்குகளின் விலை மிகவும்சரிவடைந்து காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 18,000 புள்ளிகளுக்கும் கீழ் சரிந்தது. அதாவது, 154.93 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 17,923.57 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 18,198.15 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,848.93 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 16 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும், 14 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும் இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 54 புள்ளிகள் சரிவடைந்து, 5,429.30 புள்ளிகளில் நிலைபெற்றது. இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 5,521.40 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,405.90 புள்ளிகள் வரையிலும் சென்றது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)