மற்ற நாடுகளை விட இந்தியாவில் விமான கட்டணம் மிகவும் குறைவுமற்ற நாடுகளை விட இந்தியாவில் விமான கட்டணம் மிகவும் குறைவு ... ஜனவரியில் நவரத்தினம், ஆபரணங்கள் ஏற்றுமதி சரிவு ஜனவரியில் நவரத்தினம், ஆபரணங்கள் ஏற்றுமதி சரிவு ...
ஜி.எஸ்.எம்., மொபைல் போன் வாடிக்கையாளர்கள் 64 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 பிப்
2012
01:23

புதுடில்லி : சென்ற ஜனவரி மாத நிலவரப்படி, நாட்டில் ஜி.எஸ்.எம். மொபைல் போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 64.80 @காடியாக அதிகரித்துள்ளது என, இந்திய மொபைல் போன் சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு (சி.ஓ.ஏ.ஐ.) தெரிவித்துள்ளது. சென்ற ஜனவரியில், புதிதாக 84 லட்சத்து 40 ஆயிரம் பேர், ஜி.எஸ்.எம்., மொபைல் போன் சேவையை பெற்றுள்ளனர்.
பார்தி ஏர்டெல் : இதே மாதத்தில், தொலைத்தொடர்பு துறையில் முன்னிலையில் உள்ள, பார்தி ஏர்டெல் நிறுவனம், 13 லட்சத்து 1,023 புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டது. இது, டிசம்பரை விட, 0.55 சதவீதம் அதிகம். இதையடுத்து, இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை, 17 கோடியே 69 லட்சத்து 54 ஆயிரத்து 165 ஆக உயர்ந்துள்ளது. மதிப்பீட்டு காலத்தில், வோடபோன் எஸ்ஸார் நிறுவனம், 8 லட்சத்து 55 ஆயிரத்து 349 புதிய வாடிக்கையாளர்களை இணைத்துள்ளது. இது, நவம்பரை விட, 0.58 உயர்வு. இதன் மூலம், இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை, 14 கோடியே 60 லட்சத்து 2,105 ஆக அதிகரித்துள்ளது.
ஐடியா செல்லுலார் : ஆதித்ய பிர்லா குழுமத்தைச் சேர்ந்த ஐடியா செல்லுலார் நிறுவனம், 17 லட்சத்து 47 ஆயிரத்து 169 புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டுள்ளது. இதன் மூலம், இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை, 10 கோடியே 81 லட்சத்து 27 ஆயிரத்து 280 ஆக அதிகரித்துள்ளது. இந்நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு, 16.68 சதவீதம் என்றளவில் உள்ளது.
பொதுத் துறையைச் சேர்ந்த பீ.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். ஆகிய நிறுவனங்கள் முறையே, 8 லட்சத்து 60 ஆயிரத்து 846 மற்றும் 50 ஆயிரத்து 180 புதிய வாடிக்கையாளர்களை இணைத்துள்ளன. இதையடுத்து, இந்நிறுவனங்களின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை முறையே, 9 கோடியே 34 லட்சத்து 26 ஆயிரத்து 223 மற்றும் 54 லட்சத்து 92 ஆயிரத்து 222 என்றளவில் உள்ளது.
சென்ற ஜனவரியில், ஏர்செல் நிறுவனம், 8 லட்சத்து 17 ஆயிரத்து 710 புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டது. இதன் மூலம், இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை, 6 கோடியே 24 லட்சத்து 62 ஆயிரத்து 121 ஆக உயர்ந்துள்ளது.
யூனிநார் நிறுவனம், 24 லட்சத்து 91 ஆயிரத்து 511 புதிய வாடிக்கையாளர்களை இணைத்துள்ளது. இதன் மூலம், இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை, 3 கோடியே 87 லட்சத்து 98 ஆயிரத்து 376 ஆக உயர்ந்துள்ளது.
வீடியோகான் நிறுவனம், 4 லட்சத்து 5,846 புதிய வாடிக்கையாளர்களை இணைத்துள்ளது. இதன் மூலம், இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை, 58 லட்சத்து 48 ஆயிரத்து 729 ஆக உயர்ந்துள்ளது.
லூப் மொபைல் : லூப் மொபைல் நிறுவனம், 10 ஆயிரத்து 395 புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டதன் மூலம் அதன் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 32 லட்சத்து 46 ஆயிரத்து 776 ஆக அதிகரித்துள்ளது. எடிசலாட் நிறுவனம், 22 ஆயிரத்து 58 புதிய வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. இதையடுத்து, இதன் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை, 16 லட்சத்து 92 ஆயிரத்து 673 ஆக உயர்ந்துள்ளது.
அதேநேரத்தில், எஸ்டெல் நிறுவனம், 1 லட்சத்து 19 ஆயிரத்து 93 வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இதையடுத்து, இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை, 34 லட்சத்து 30 ஆயிரத்து 288 ஆக குறைந்துள்ளது.
ஜனவரியில் ஜி.எஸ்.எம். மொபைல் போன் நிறுவனங்களின் சந்தை பங்களிப்பு (வளர்ச்சி %)
பார்தி ஏர்டெல் : 27.30
வோடபோன் : 22.93
ஐடியா : 16.68
பீ.எஸ்.என்.எல். : 14.42
ஏர்செல் : 9.64
யூனிநார் : 5.99

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)