பதிவு செய்த நாள்
28 பிப்2012
04:39
புதுடில்லி:இந்தியா, பாகிஸ்தான் இடையில் நிலவிய தடைகள் நீக்கப்பட்ட பிறகு, இரு நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர வர்த்தகம் சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது என, தனியார் கூட்டமைப்பு ஒன்று கருத்து தெரிவித்துள்ளது.சென்ற 2010-11ம் நிதியாண்டில், இரு நாடுகளுக்கு இடையில், 270 கோடி டாலர் (13 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) மதிப்பிற்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இதில், இந்தியாவிலிருந்து மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதி தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, இந்தியாவிலிருந்து, சர்க்கரை, பருத்தி, கையினால் தயாரிக்கப்படும் நாரிழைகள், ரசாயனங்கள் உள்ளிட்ட பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பாகிஸ்தானிலிருந்து, தாதுப்பொருள்கள், இயற்கை ரசாயனங்கள் உள்ளிட்டவை இறக்குமதி செய்யப்படுகின்றன. தற்போது, இவ்விரு நாடுகளுக்கு இடையே, 1,900 பொருட்கள் மீது ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தகம் நடைபெறுகிறது.எளிதில் விசா வழங்குதல், சுங்க வரி நடைமுறை மற்றும் கட்டுப்பாடுகளைக் குறைத்தல் போன்றவற்றை இரு நாடுகளும் பின்பற்றும் பட்சத்தில், இரு நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர வர்த்தகம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.வரும் 2015ம் ஆண்டில், இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பரஸ்பர வர்த்தகம், 1,000 கோடி டாலரை (50 ஆயிரம் கோடி ரூபாய்) தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|