மின் விடுமுறையால் நூற்பாலைகளில் உற்பத்தி முடங்கும் அபாயம்மின் விடுமுறையால் நூற்பாலைகளில் உற்பத்தி முடங்கும் அபாயம் ... நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில்...நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதமாக சரிவு நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில்...நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.1 ... ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ஓ.என்.ஜி.சி., பங்கு வெளியீடு குறைந்தபட்ச விலை ரூ.290
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மார்
2012
01:52

புதுடில்லி:ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் ஏல முறையிலான பங்கு வெளியீடு இன்று நடைபெறுகிறது. ஒரு பங்கின் அடிப்படை விலை 290 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. காலை 9.15 மணியில் இருந்து மாலை 3.30 மணி வரை பங்குகள் ஏலம் விடப்படும்.
பங்குச் சந்தையின் சாதகமற்ற சூழல் காரணமாக, ஓ.என்.ஜி.சி.ன் பங்கு வெளியீட்டிற்கு முதலீட்டாளர்களிடம் ஆதரவு கிடைக்குமா என்ற கேள்விக்குறி எழுந்தது. இதையடுத்து, சென்ற ஆண்டு இந்நிறுவனத்தின் பங்கு வெளியீடு, பலமுறை தள்ளி வைக்கப்பட்டது.இதையடுத்து, பங்குச்சந்தையில், நிறுவனர்கள் ஏலம் மூலம் பங்கு விற்பனை மேற்கொள்ளும் புதிய நடைமுறையை பின்பற்ற முடிவு செய்யப்பட்டது. இதன்படி, முதன் முறையாக, ஓ.என்.ஜி.சி. நிறுவனம், ஏல முறையில் பங்கு விற்பனை மேற்கொள்கிறது.
இந்த ஏலம் வாயிலாக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 42.77 கோடி பங்குகளை விற்பனை செய்து, 12 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த ஏலத்தில், சில்லரை முதலீட்டாளர்கள், நிதி நிறுவனங்கள், உயர் சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்கள், ஓ.என்.ஜி.சி. நிறுவன ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கலாம். அவர்கள் குறிப்பிடும் விலையில், தேவைப்படும் பங்குகள் இருக்கும் பட்சத்தில், அந்த தொகைக்கு பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)