நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில்...நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதமாக சரிவுநடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில்...நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.1 ... ... சென்னையில் முட்டை விலை உயர்வு சென்னையில் முட்டை விலை உயர்வு ...
கிங்பிஷர் நிறுவனம் மூடப்படாது: அமைச்சர் அஜித் சிங் தகவல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மார்
2012
09:55

புதுடில்லி: தனியார் விமான நிறுவனமான கிங்பிஷர் நஷ்டத்தில் இயங்கினாலும், அந்த நிறுவனத்தை மூட முடியாது என, விமானத் துறை அமைச்சர் அஜித்சிங் தெரிவித்துள்ளார். கிங்பிஷர் விமான நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதால், அந்த நிறுவனம் தன் விமான சேவைகளை கணிசமாக குறைத்து விட்டது. பிரபல மதுபான நிறுவன உரிமையாளர் விஜய் மல்லையா தான், இந்த விமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். கிங்பிஷர் விமான நிறுவனம் கடும் நஷ்டத்தில் இயங்குவதால், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், இந்த நிறுவனம் கடந்த மாதம், விமான சேவையை 50 சதவீதத்திற்கும் குறைவாகவே நடத்தியது. விமானத் துறை விதிமுறைகளை இந்த நிறுவனம் மீறுவதாக, மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது. பயணிகளின் சேவை பாதிக்காத வகையில், எவ்வளவு விமானங்களை இயக்க முடியும் என்பது குறித்த அட்டவணை அளிக்கும்படி, விமானத் துறை டைரக்டர் ஜெனரல் கடந்த வாரம் இந்த நிறுவனத்திடம் கேட்டிருந்தார். இதன்படி, விமான சேவை குறித்த விவரங்களை கிங்பிஷர் நிறுவனம், இத்துறையின் டைரக்டர் ஜெனரலிடம் சமர்ப்பித்துள்ளது. இதற்கிடையே, இந்த நிறுவனத்தைக் காப்பாற்ற பல்வேறு வங்கிகள் கடன் உதவிகள் அளிக்க முன்வந்துள்ளன. இது குறித்து, மத்திய விமானத் துறை அமைச்சர் அஜித் சிங் குறிப்பிடுகையில், "ஒரு நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதால், அதை மூடிவிட முடியாது. பயணிகளின் சேவை பாதிக்காத வகையில், அதன் செயல்பாடுகள் இருக்க வேண்டும். விதியை மீறும் பட்சத்தில், அதன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)