பதிவு செய்த நாள்
01 மார்2012
09:55
புதுடில்லி: தனியார் விமான நிறுவனமான கிங்பிஷர் நஷ்டத்தில் இயங்கினாலும், அந்த நிறுவனத்தை மூட முடியாது என, விமானத் துறை அமைச்சர் அஜித்சிங் தெரிவித்துள்ளார். கிங்பிஷர் விமான நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதால், அந்த நிறுவனம் தன் விமான சேவைகளை கணிசமாக குறைத்து விட்டது. பிரபல மதுபான நிறுவன உரிமையாளர் விஜய் மல்லையா தான், இந்த விமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். கிங்பிஷர் விமான நிறுவனம் கடும் நஷ்டத்தில் இயங்குவதால், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், இந்த நிறுவனம் கடந்த மாதம், விமான சேவையை 50 சதவீதத்திற்கும் குறைவாகவே நடத்தியது. விமானத் துறை விதிமுறைகளை இந்த நிறுவனம் மீறுவதாக, மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது. பயணிகளின் சேவை பாதிக்காத வகையில், எவ்வளவு விமானங்களை இயக்க முடியும் என்பது குறித்த அட்டவணை அளிக்கும்படி, விமானத் துறை டைரக்டர் ஜெனரல் கடந்த வாரம் இந்த நிறுவனத்திடம் கேட்டிருந்தார். இதன்படி, விமான சேவை குறித்த விவரங்களை கிங்பிஷர் நிறுவனம், இத்துறையின் டைரக்டர் ஜெனரலிடம் சமர்ப்பித்துள்ளது. இதற்கிடையே, இந்த நிறுவனத்தைக் காப்பாற்ற பல்வேறு வங்கிகள் கடன் உதவிகள் அளிக்க முன்வந்துள்ளன. இது குறித்து, மத்திய விமானத் துறை அமைச்சர் அஜித் சிங் குறிப்பிடுகையில், "ஒரு நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதால், அதை மூடிவிட முடியாது. பயணிகளின் சேவை பாதிக்காத வகையில், அதன் செயல்பாடுகள் இருக்க வேண்டும். விதியை மீறும் பட்சத்தில், அதன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|