பதிவு செய்த நாள்
08 மார்2012
00:08
ஈரோடு: கோடை வெயிலால் எலுமிச்சை பழம் விலை ஏறுமுகமாக உள்ளது. ஈரோட்டில் எதிர்பார்த்த அளவிற்கு விற்பனை இல்லாததால் வியாபாரிகள் அதிருப்தியில் உள்ளனர்.ட்டி வதைக்கிறது. இதனால், ஜூஸ் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. பழ ஜூஸ், குளிர்பானங்களுக்கு இணையாக, நுங்கு, இளநீர், தர்பூசணி, மோர், கம்பங்கூழ், தயிர் ஆகியவற்றின் விற்பனையும் ஜோராக நடக்கிறது.ஈரோட்டில் வெயில் சுட்டெரிப்பதாலும், வரத்து குறைவாக இருப்பதாலும், ஒரு எலுமிச்சை பழம் ஐந்து ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆனால், கோடையில் எதிர்பார்த்த விற்பனை இல்லாததால், எலுமிச்சை விற்பனையாளர்கள் கவலையில் உள்ளனர்.ஈரோடு நேதாஜி மார்க்கெட் எலுமிச்சை வியாபாரி கணேசன் கூறியதாவது:உடலுக்கு புத்துணர்ச்சியை தந்து, உடல் சோர்வை விரட்டும் பழங்களில் எலுமிச்சை முக்கியமானது.ஆந்திரா மற்றும் கர்நாடகாவிலிருந்து ஈரோட்டுக்கு எலுமிச்சை பழம் விற்பனைக்கு வருகிறது. பழத்தின் அளவுக்கேற்ப இரண்டு முதல் ஐந்து ரூபாய் வரை எலுமிச்சை பழம் விற்பனையாகிறது. கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு வரத்து குறைவால், விலை உயர்ந்துள்ளது.கடும் வெயில் நிலவுவதால், விற்பனை அதிகமாக இருக்கும் என நினைத்தோம். ஆனால், அதிக விலைக்கு விற்பதால், எலுமிச்சை பழத்தை வாங்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் விற்பனையின்றி தவித்து வருகிறோம். இவ்வாறு கணேசன் கூறினார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|