ஒரு நாள் மின் விடுமுறை மதுரையில் ரூ.300 கோடி வர்த்தகம் பாதிப்புஒரு நாள் மின் விடுமுறை மதுரையில் ரூ.300 கோடி வர்த்தகம் பாதிப்பு ... உலகப்பணக்காரர்களில் 4 சதவீதம் பேர் இந்தியர்கள் : இந்தியாவின் நம்பர்-1 முகேஷ் அம்பானி உலகப்பணக்காரர்களில் 4 சதவீதம் பேர் இந்தியர்கள் : இந்தியாவின் நம்பர்-1 ... ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
காஸ் தட்டுப்பாடு எதிரொலி : மண்ணெண்ணெய் லிட்டர் ரூ.60 க்கு விற்பனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மார்
2012
11:56

மதுரை : சமையல் காஸ் தட்டுப்பாடு காரணமாக மண்ணெண்ணெய்க்கு பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. ரேஷன் கடையில் லிட்டர் ரூ.14 க்கு விற்கப்படும் மண்ணெண்ணெய் கள்ளச்சந்தையில் ரூ.60 க்கு விற்கப்படுகிறது.

கடந்த ஜனவரி முதல் சமையல் காஸ் தட்டுப்பாடு நிலவுகிறது.நேற்றைய நிலவரப்படி மதுரை மாவட்டத்தில் மட்டும் 1.90 லட்சம் பேர் "காஸ்' பெற பதிவு செய்துள்ளனர். இதை பயன்படுத்தி கள்ளச்சந்தையில் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.800 முதல் 1000 வரை விற்கப்பட்டது. திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் ரூ.1200 வரை விற்கப்பட்டது. தனியார் சிலர் கிலோ ரூ.70 முதல் ரூ.80 க்கு காலி சிலிண்டர்களில் ஏற்றித்தந்தனர்.

மதுரை மாவட்டத்தில் எட்டரை லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. இதில் ஆறரை லட்சம் பேர் காஸ் இணைப்புகள் வைத்துள்ளனர். (இதில் ஒன்றரை லட்சம் பேர் அரசின் இலவச காஸ் இணைப்பை பெற்றவர்கள்). தற்போது டீலர்களிடம் சமையல் "காஸ் சிலிண்டர்' ஸ்டாக் இல்லாததால், மக்கள் வேறு வழியின்றி மண்ணெண்ணெயை நாடுகின்றனர். சமையல் காஸ் இரு சிலிண்டர் இணைப்பு உள்ளவர்களுக்கு ரேஷன் மண்ணெண்ணெய் கிடையாது. ஒரு இணைப்பு கார்டுதாரர்களுக்கு 3 லிட்டரும், இணைப்பே இல்லாதவருக்கு 8 லிட்டர் மண்ணெண்ணெயும் வழங்கப்படும். ஆனால் பலர் ரேஷன் கடைகளில் காஸ் இணைப்பு இல்லை என தவறான தகவலை தந்து தொடர்ந்து மண்ணெண்ணெய் பெறுகின்றனர். ரேஷனில் லிட்டர் ரூ.14 க்கு வாங்கி சிலர் கள்ளச்சந்தையில் விற்கின்றனர். தட்டுப்பாடு காரணமாக அதை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்குகின்றனர். இதனால் பிளாக்கில் மண்ணெண்ணெய் லிட்டர் ரூ.50 முதல் 60 வரை விற்கப்படுகிறது.

கடந்த 3 மாதங்களாக மாவட்டங்களுக்கு வழங்கப்பட்ட மண்ணெண்ணெயின் அளவு 75 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்திற்கு கடந்த மாதம் 2,364 கிலோ லிட்டரே வழங்கப்பட்டது. தற்போது சமையல் காஸ் தட்டுப்பாடு காரணமாக மண்ணெண்ணெய் கிடைப்பதிலும் பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதே நிலை தென்மாவட்டங்கள் முழுதும் நீடிக்கிறது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)