அதிக அளவில் பருத்தி  தேக்கத்தால் கூட்டுறவு மையங்களில் ஏலம் ரத்து அதிக அளவில் பருத்தி தேக்கத்தால் கூட்டுறவு மையங்களில் ஏலம் ரத்து ... இந்திய ரயில்வே வருவாய் ரூ.93,000 கோடியாக உயர்வு இந்திய ரயில்வே வருவாய் ரூ.93,000 கோடியாக உயர்வு ...
இந்திய பணக்காரர்களில் முகேஷ் அம்பானி முதலிடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மார்
2012
00:04

வாஷிங்டன்: இந்திய பணக்காரத் தொழிலதிபர்களின் பட்டியலில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 2,230 கோடி டாலர் (1 லட்சத்து 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) ஆக உள்ளது.அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை, உலகப் பெரும் கோடீஸ்வர தொழிலதிபர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 48 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த பட்டியலில், உலக அளவில், முகேஷ் அம்பானி 19வது இடத்தைப் பிடித்துள்ளார். சென்ற ஆண்டு, இவரது நிகர சொத்து மதிப்பு 470 கோடி டாலர் குறைந்துள்ள நிலையிலும், இந்திய பணக்காரர்கள் வரிசையில் இவர் முதலிடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.இந்தியாவின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில், முகேஷ் அம்பானியை அடுத்து, சாவித்ரி ஜிண்டால் இடம் பெற்றுள்ளார். ஆனால் உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் இவர், 80வது இடத்தை பிடித்துள்ளார். இதே போல், சுனில் மிட்டல் (113), குமாரமங்கலம் பிர்லா (116), அனில் அம்பானி (118), திலிப் சங்வி (124), சசி மற்றும் ரவி ரூயா (133), குஷால் பால் சிங் (153) ஆகியோர் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.உலகிலேயே பெரும் கோடீஸ்வரராக, மெக்சிகோ தொழிலதிபர் கார்லோஸ் ஸ்லிம், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார். இவரது சொத்து மதிப்பு 6,900 கோடி டாலர் (3லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய்) ஆக உள்ளது. இரண்டாவது இடத்தில், பில்கேட்சும், மூன்றாம் இடத்தில் வாரன் பபெட்டும் இடம் பெற்றுள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)