பதிவு செய்த நாள்
09 மார்2012
11:50
சிவகாசி : சிவகாசியில் பட்டாசு குடோன்களுக்கு சீல் வைக்கப்பட்டதால், வெளிமாநிலங்களுக்கு சரக்கு ஏற்றாமல், லாரி டிரான்ஸ்போர்ட் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் தேக்கமடைந்துள்ளன.
சிவகாசி தாலுகா, விஜயகரிசல்குளத்தில் அனுமதியின்றி, வீட்டில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட போது நடந்த விபத்தில், பள்ளி மாணவி பலியானார்; 2 குழந்தைகள் காயமடைந்தனர். இதையடுத்து, பட்டாசுகளை வெளியிடங்களுக்கு அனுப்பும் குடோன்களில் வருவாய் துறையினர், போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
அனுமதி பெற்ற குடோன்களில் அளவிற்கு அதிகமாக பட்டாசு இருப்பு வைத்ததாக 6 குடோன்களுக்கும், அனுமதியின்றி செயல்பட்ட பல குடோன்களுக்கும் சீல் வைத்தனர். அனுமதியுடன் செயல்பட்ட குடோன்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை தளர்த்த, லாரி டிரான்ஸ்போர்ட் சங்கத்தினர் கோரினர். வருவாய்த் துறையினர் இதற்கு அனுமதிக்கவில்லை. இதையடுத்து, சிவகாசி லாரி டிரான்ஸ்போர்ட் சங்கத்தினர், வெளி மாநிலங்களுக்கு சரக்குகள் அனுப்புவதில்லை என, கடந்த 15 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், தினமும் சிவகாசியில் இருந்து, 30 லாரிகளில் சரக்கு அனுப்பும் பணி தடைபட்டுள்ளது. சரக்குகள் அனுப்ப முடியாததால், ஒவ்வொரு பட்டாசு ஆலைகளிலும் பல கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசு பண்டல்கள் முடங்கியுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|