பதிவு செய்த நாள்
09 மார்2012
16:05
துபாய் : கச்சா எண்ணெய் உற்பத்தியில் ஓபெக் சாதனை படைத்திருக்கிறது. கச்சா எண்ணெய்யை எடுத்து, அதை ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு என்று ஓபெக் என்ற தனியொரு அமைப்பு இருக்கிறது. இதில் 12 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கின்றன. இந்த நாடுகள் கடந்த ஜனவரி மாதத்தில் ஒரு நாளைக்கு 4லட்சம் பேரல் தான் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்து வந்தன. ஆனால் அதுவே பிப்ரவரி மாதத்தில் ஒரு நாளைக்கு 31.27 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்து சாதனை படைத்திருக்கிறது.
லிபியாவில் கலவரம் ஓய்ந்து, அந்நாடு இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால், அந்நாட்டின் உற்பத்தி அதிகரித்து இருக்கிறது. அதனால் தான் இவ்வளவு கச்சா எண்ணெய் உற்பத்தியாகி இருப்பதாக ஓபெக் அமைப்பு தெரிவித்து இருக்கிறது.
கடந்த 2008ம் ஆண்டுக்கு பிறகு ஒரு நாளைக்கு இவ்வளவு மில்லியன் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்வது, இது தான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|