பதிவு செய்த நாள்
11 மார்2012
14:09
புதுடில்லி : ஹோலி பண்டிகையின் போது வண்ணப்பொடிகள் மற்றும் அதற்கான உபகரணங்கள் உள்ளிட்டவைகளின் விற்பனை ரூ.12 ஆயிரம் கோடியை எட்டியிருப்பதாக அசோசெம் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள முக்கிய பண்டிகைகளில் ஹோலி பண்டிகையும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் ஹோலி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் மக்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ண கலர் பொடிகளை தூவியும், கலர் சாயங்களை தண்ணீரில் கலந்து ஒருவர் மீது ஒருவர் பீயிச்சி அடித்தும் தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்துவர்.
ரசாயணம் கலந்த கலர் பொடியால் நிறைய பிரச்னைகள் வருவதால் இயற்கை முறையில் தயாரான தாவர வண்ணப் பொடிகள் மற்றும் வாசனை பொடிகளுக்கு இந்தாண்டு மவுசு அதிகரித்து காணப்பட்டது. இந்தாண்டு மட்டும் தாவர வண்ணப் பொடிகள் மற்றும் வாசனை கலர் பொடிகள் ரூ.4,500 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளதாகவும், வண்ணப்பொடிகளை தண்ணீரில் கலந்து அடிக்கும் கருவி, பொம்பைகள் உள்ளிட்ட இதர பொருட்களின் விற்பனை ரூ.7500 கோடிக்கும் என மொத்தம் ரூ.12 ஆயிரம் கோடிக்கு ஹோலி பண்டிகையில் விற்பனையாகி இருக்கின்றன. இந்த தகவலை அசோசெம் அமைப்பு மதிப்பீடு செய்து வெளியிட்டு இருக்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|