பதிவு செய்த நாள்
18 மார்2012
12:45
சென்னை : கைத்தறி விற்பனையை அதிகரிக்க, இரண்டு புதிய திட்டங்களை கோ-ஆப்டெக்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், "கோ-ஆப்டெக்ஸ் துவக்க தினமான ஏப்ரல் 2ம் தேதியை, வாடிக்கையாளர்களுடன் இணைந்து கொண்டாட, முதன் முறையாக, கைத்தறித் துணிகள் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தவிர, 1,999 ரூபாய் மதிப்புக்கு கைத்தறித் துணிகள் வாங்கினால், 20 சதவீதம் தள்ளுபடியும், 2,000 முதல், 4,999 ரூபாய் வரை மதிப்புக்கு துணிகள் வாங்கினால், 25 சதவீத தள்ளுபடியும், 5,000 ரூபாய்க்கு மேல் வாங்கினால், 30 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படும். இச்சலுகைகள் மார்ச் 17 முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை, கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் வழங்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|