பதிவு செய்த நாள்
18 மார்2012
13:27
பிரபல ஜூவல்லரி நிறுவனமான ஜோய் ஆலுக்காஸ் விமான சேவையிலும் களம் இறங்குகிறது. முதற்கட்டமாக ஆடம்பர ஹெலிகாப்டர் சேவையை ஆரம்பிக்கிறது. மேலும் இந்தாண்டு இறுதிக்குள் விமான சேவையையும் தொடங்க இருக்கிறது.
கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜூவல்லரி நிறுவனமான ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம், இந்தியா முழுக்க தனது கிளைகளை வைத்துள்ளது. இந்நிலையில் இந்த நிறுவனம் புதிய முயற்சியாக விமான சேவையிலும் களம் இறங்கி இருக்கிறது. புதிதாக ஜோய் ஜெட்ஸ் என்ற பெயரில் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் சேவையை தொடங்கியிருக்கிறது. முதற்கட்டமாக 6 இருக்கைகள் கொண்ட அதிநவீன வசதிகள் கொண்ட ஹெலிகாப்டரை வாங்கியிருக்கிறது. இதன்மூலம் கேரளாவில் உள்ள சுற்றாலத்தலங்களை இந்த ஹெலிகாப்டர் மூலம் கண்டு மகிழலாம். மேலும் அவசர காலங்களுக்கும், மருத்துவ உதவி தேவைப்படும் காலங்களுக்கும் மற்றும் சிறப்பு தேவைகளுக்கும் இந்த ஹெலிகாப்டர்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதுமட்டுமின்றி இந்த ஆண்டு இறுதிக்குள் நீண்ட தூரம் பயணம் செய்யக்கூடிய விமானங்களையும், சர்வதேச விமான சேவைகளையும் 6 மாத காலத்தில் துவக்க இந்த நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. இதற்காக 4 விமானங்களை வாங்கவும் திட்டமிட்டு இருக்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|