பதிவு செய்த நாள்
18 மார்2012
23:45
உலகளவில் வரும் 2020ம் ஆண்டில், விமான போக்குவரத்தில் இந்தியா 3ம் இடத்திற்கு முன்னேறும் என, ஆசிய பசிபிக் விமான போக்குவரத்து மையம் (காபா) மதிப்பீடு செய்துள்ளது.இது குறித்து காபா தலைமை செயல் அதிகாரி கபில் கால் கூறுகையில், "அடுத்த 8 ஆண்டுகளில் இந்தியாவில் 1,030 விமானங்கள் இயக்கப்படும். இவற்றில் 54.2 கோடி பேர் பயணம் மேற்கொள்வர் என, ஆய்வில் தெரியவந்துள்ளது' என்றார்.
இந்தியாவில் 2000ம் ஆண்டில் விமான பயணிகள் போக்குவரத்து, 4.2 கோடியாக இருந்தது. இன்று, இந்த எண்ணிக்கை 15 கோடியாக உயர்ந்துள்ளது. விமானங்களின் எண்ணிக்கை, 119லிருந்து 437 ஆக உயர்ந்துள்ளது. குறைந்த கட்ட ணத்தில் இயக்கப்படும் விமான சேவைக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. விமான போக்குவரத்து சந்தையில், இப்பிரிவின் பங்களிப்பு 70 சதவீதமாக உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, இந்திய விமான துறை பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வருகிறது. இத்துறை வளர்ச்சி காண, அதிக அளவில் முதலீடு மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.கடந்த 2000ல், இந்திய விமான போக்குவரத்தில் மேற்கொள்ளப்பட்ட மொத்த முதலீடு, 2,700 கோடி டாலராக இருந்தது. இது வரும் 2020ம் ஆண்டு 12,000 கோடி டாலராக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில், 8,000 கோடி டாலர் புதிய விமானங்களை வாங்க பயன்படுத்தப்படும்.
விமான துறையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, விமான போக்குவரத்து கட்டுப்பாடு சார்ந்த பிரிவில், 200 கோடி டாலர் அளவிற்கு முதலீடு மேற்கொள்ள வேண்டும். மேலும், பாதுகாப்பு திட்டங்களுக்கு 15 லட்சம் டாலர் முதலீடு அவசியமாகும்.
விமான துறையில், தகவல் தொழில்நுட்ப வசதிக்காக, மொத்த வருவாயில் 1-3 சதவீதம் செலவிடப்படும் என, காபாவின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, வரும் 2030ம் ஆண்டு இந்தியாவிற்கு, 14,500 கோடி டாலர் மதிப்பிலான 1,043 விமானங்கள் தேவைப்படும் என, ஏர்பஸ் நிறுவனத்தின் தலைவர் (சந்தைப்படுத்தல்) தெரிவித்துள்ளார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|