உலகின் பாரம்பரிய நிறுவனங்களாக டாடா ஸ்டீல், விப்ரோ தேர்வு!உலகின் பாரம்பரிய நிறுவனங்களாக டாடா ஸ்டீல், விப்ரோ தேர்வு! ... நடப்பு நிதியாண்டின் ஒன்பது மாதங்களில்... மின் உற்பத்தி 75 சதவீத இலக்கை எட்டியது நடப்பு நிதியாண்டின் ஒன்பது மாதங்களில்... மின் உற்பத்தி 75 சதவீத இலக்கை ... ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
விமான சேவையில் இந்தியா மூன்றாமிடத்திற்கு முன்னேறும்: - பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மார்
2012
23:45

உலகளவில் வரும் 2020ம் ஆண்டில், விமான போக்குவரத்தில் இந்தியா 3ம் இடத்திற்கு முன்னேறும் என, ஆசிய பசிபிக் விமான போக்குவரத்து மையம் (காபா) மதிப்பீடு செய்துள்ளது.இது குறித்து காபா தலைமை செயல் அதிகாரி கபில் கால் கூறுகையில், "அடுத்த 8 ஆண்டுகளில் இந்தியாவில் 1,030 விமானங்கள் இயக்கப்படும். இவற்றில் 54.2 கோடி பேர் பயணம் மேற்கொள்வர் என, ஆய்வில் தெரியவந்துள்ளது' என்றார்.
இந்தியாவில் 2000ம் ஆண்டில் விமான பயணிகள் போக்குவரத்து, 4.2 கோடியாக இருந்தது. இன்று, இந்த எண்ணிக்கை 15 கோடியாக உயர்ந்துள்ளது. விமானங்களின் எண்ணிக்கை, 119லிருந்து 437 ஆக உயர்ந்துள்ளது. குறைந்த கட்ட ணத்தில் இயக்கப்படும் விமான சேவைக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. விமான போக்குவரத்து சந்தையில், இப்பிரிவின் பங்களிப்பு 70 சதவீதமாக உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, இந்திய விமான துறை பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வருகிறது. இத்துறை வளர்ச்சி காண, அதிக அளவில் முதலீடு மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.கடந்த 2000ல், இந்திய விமான போக்குவரத்தில் மேற்கொள்ளப்பட்ட மொத்த முதலீடு, 2,700 கோடி டாலராக இருந்தது. இது வரும் 2020ம் ஆண்டு 12,000 கோடி டாலராக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில், 8,000 கோடி டாலர் புதிய விமானங்களை வாங்க பயன்படுத்தப்படும்.
விமான துறையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, விமான போக்குவரத்து கட்டுப்பாடு சார்ந்த பிரிவில், 200 கோடி டாலர் அளவிற்கு முதலீடு மேற்கொள்ள வேண்டும். மேலும், பாதுகாப்பு திட்டங்களுக்கு 15 லட்சம் டாலர் முதலீடு அவசியமாகும்.
விமான துறையில், தகவல் தொழில்நுட்ப வசதிக்காக, மொத்த வருவாயில் 1-3 சதவீதம் செலவிடப்படும் என, காபாவின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, வரும் 2030ம் ஆண்டு இந்தியாவிற்கு, 14,500 கோடி டாலர் மதிப்பிலான 1,043 விமானங்கள் தேவைப்படும் என, ஏர்பஸ் நிறுவனத்தின் தலைவர் (சந்தைப்படுத்தல்) தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)