பதிவு செய்த நாள்
20 மார்2012
09:47
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில் (9.15 மணியளவில்), மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 4.94 புள்ளிகள் அதிகரித்து 17278.31 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 6.55 புள்ளிகள் அதிகரித்து 5250.50 புள்ளிகளோடு காணப் பட்டது. மத்திய பட்ஜெட்டில், சேவை வரி, உற்பத்தி வரி மற்றும் சுங்க வரி ஆகியவை உயர்த்தப்பட்டதன் எதிரொலியாக, நேற்று பங்குச் சந்தையில் வர்த்தகம் சரிவைச் சந்தித்தது.அமெரிக்காவில் பணவீக்கம் குறைந்து, பொருளாதார வளர்ச்சி ஏறுமுகத்தில் உள்ளது என்ற செய்தியால், இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது. ஆனால், இது, இந்தியப் பங்குச் சந்தைகளில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், மருந்து, ஆரோக்கிய பராமரிப்பு மற்றும் நுகர்பொருள் துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவை இருந்தது. இருப்பினும், ரியல் எஸ்டேட், மின்சாரம், பொறியியல் துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் சரிவடைந்து போனது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|